Friday, November 2, 2007

நட்பு

இல்லங்களின் விதிகளுக்கும்,
வினாகளுக்கும் அடங்கியதல்ல
நம் நட்பு..

காதல் கொடுத்த கண்ணீரை
உன் தோள்களில் துடைத்தேன்..

விதி எழுதிய தீர்ப்புகளில்
நாமும் தண்டிக்கப்பட்டோம்..

ஆம் இது பிரியும் தருவாய்..
சொந்த பந்தமெல்லாம் ஏலன பார்வை பார்க்க,
தோள் தட்டி துணை நின்றாய்..
அவர் தன் பொறாமை பார்வையின் இடையில்,
என் வெற்றிக்கண்டு
எட்டி நின்று புன்னகை பூத்தாய்..

பணம் பார்த்து வந்த பந்தம் ஆயிரம் வேண்டாமடா
என் மனம் பார்த்து வந்த உன் ஒரு சொந்தம் போதுமடா..

உயிர் கொடுப்பன் தோழன் என்பது வேண்டுமெனின் பொய்யாய் தோன்றலாம் சிலருக்கு..
உண்மையான மனம் கொடுப்பான் தோழன் என்பது நிச்சயம் உண்மை..
இன்றைய போட்டியும்,பொறாமையும் நிறைந்த இவ்வுலகில்
அவை கிடைப்பதே அரிது..

நம் நட்பிற்க்கும் கற்புண்டு..
ஆயிரம் ஆராவரத்திற்க்கும்,மகிழ்சிக்கும் மத்தியில்
என்னால் உன் பாதையும்
உன்னால் என் பாதையும்
மாறாமல் பார்த்துகொள்வோம்..

ஆயிரம் அலுவலுக்கு மத்தியில்,
ஒரு நிமிடம்,
ஜன்னல் வழியே அண்னாந்து பார்க்கும் என் பார்வை,
அப்போது கடந்து செல்லும் மேகங்களோடு
உன் நினைவுகளும் கடந்து போகும்..
அந்த ஒரு நிமிடம் போதும்
நம் நட்போடு நடை போட..

கிளையில்லா மரமொன்றும்
நிழழொன்று கொடுக்காது..
நல்மனமில்லா நட்பென்றும்
நெடுந்தூரம் நிலைக்காது..

காதலில் மட்டுமே வலி என்று சொன்னவன் காதில்
உரக்கச் சொல்,
நட்பிலும் காதல் உண்டு,
பிரிவிலும் வலி உண்டு என்று..

காதல் விளையாட்டு

என் நேர் விழி பார்வையும்
உன் ஓர விழி பார்வையும்
இணைந்த அந்த பாதையில்
நம் காதல் பயணம் தொடங்கியதே!!

உன்னால்,
கவிதையும்
காதலும்
இன்று கட்டித் தழுவியதே!!

உன்னை நினைத்து கரைத்த
நிமிடங்களை நினைத்து
கரைந்தே போகிறேன்..

சத்தமின்றி நுழைந்தாய்..
சலனமின்றி சாகிறேன்..

என் எழுதுகோலுக்கும்
காதலிக்க கற்றுக் கொடுத்துச் சென்றாய்..

காதல் தேவனின் மடியில் சாய்வதாய் நினைத்து,
மரண தேவனின் மடியில் மடிகிறேன்..

உன் விரல் பிடித்து நடக்க ஆசை இல்லை எனக்கு,
உன் விழி பிடித்து நடக்கவே பிரியப்படுகிறேன்..

படிக்க அமர்ந்தபோது,
என் சிந்தை எல்லம் சிதறிப்போக
சிதறிய பாகங்களில் எல்லாம் உன் முகம்..

கவிதை எல்லாம் கை வந்த கலை,
உன்னை காணும் முன்..
இப்போதெல்லாம் வார்த்தைகளும் என்னுடன்
வம்பிழுக்கின்றன,உனக்காய் மட்டுமே கவிதை எழுதிகிறேன் என்று..

நேரம் போவது அறியாது
வரம்பு மீறி நிற்கிறது என் பார்வை,
உன் அழகு முகத்தின் மீதே
உன் தந்தை அருகில் இருக்கிறார்
என்பதை கூட அறியாமல்..

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்தே
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கிறேன்
இதுதன் காதல் ஆடும் ஆட்டமோ..??

Tuesday, August 7, 2007

ஒரு நாள் நீ.......

ஒரு நாள் நீ பூக்களை முகர்ந்து கொண்டிருந்தாய்..
அதன் மகரந்தம் உந்தன் சுவாஸத்துடன் ,
போராடி போராடி,தோற்றுப் போக கண்டேன்..

ஒரு நாள் நீ மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்தாய்..
உன் பஞ்சனை தேகம் ,
நீ உறங்கும் பஞ்சு மெத்தை எடையுடன் போட்டி போடும்..

ஒரு நாள் நீ,
என் காதோரம் சொன்ன சில வார்த்தைகள் எல்லாம்
என் நெஞ்சோரம் பச்சைக் குத்திக்கொண்டது..

ஒரு நாள் நீ
பூக்களின் மத்தியில்,
கண்ணத்தில் கை வைத்து அமர்ந்து பூக்களை ரசித்துக்கொண்டிருந்தாய்..
தேன் உரிஞ்ச வந்த பட்டாம்பூச்சீகள்
"அட இது என்னடா புது வகை பூ??
இது வரை நாம் கண்டதில்லையே??"
என முணுமுணுத்தது ,என் காதுகளிலிருந்து தப்பவில்லை

ஒரு நாள் நீ குறும்பு செய்த தம்பியரை கடிந்து கொண்டிருந்தாய்..
முதல் முறையாய் ,சிவந்த நிலவை அன்று தான் கண்டேன்..

ஒரு நாள் நீ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாய்..
ஒவ்வொரு முறை நீ பக்கங்களை திருப்பும் பொழுதும்
அப்பக்கங்களின் கதறல் என் காதுகளில்..

ஒரு நாள் நீ பரமபதம் விளையாடிக்கொண்டிருந்தாய்..
தாயம் போட நீ கடவுளை வேண்டி உருட்டும் பொழுதும்
என் இதயமும் சேர்ந்து அல்லவா உருண்டது..

ஒரு முறை நீ குளித்து முடித்து தலை துவட்டிக்கொண்டிருந்தாய்..
அப்போது உதிர்ந்த தண்ணீர் துளிகள்,
அடை மழை பெய்து,இலைகளில் இருந்து ஒழுகும் இறுதி துளிகள் போல..

ஒரு நாள் நீ உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு வெளியே வந்தாய்..
ஏழு வண்ணங்களில் வானவில் காட்டாத அழகு,
உன் ஒற்றை உதட்டுச்சாயம் காட்டி விட்டது..

ஒரு நாள் நீ கல்லூரி வீதி வழியே நடந்து போய்க் கொண்டிருந்தாய்..
அறிவியல் படிக்க செல்லும் உன்னிடமிருந்து,
காதல் பாடம் படித்து கொண்டிருந்தனர் மாணவர்கள்..

ஒரு நாள் நீ என நான் எழுதிய கவிதைகள் யாவும்,
ஒரு நாள் நாம் என மாறக்கூடும் தினம்
வெகு தொலைவில் இல்லை..

மீண்டும் மீண்டும் காதலித்தேன்..

பெண்ணே நீ கடந்து போகையில்
என் இதயம் முனுமுனுத்தது
"வெண்ணிலவை வீதியில் உலவ விட்டது யார்?"

சதையால் செய்த இதயம் கொண்டதால் தானோ
கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாய்??
இரும்பால் செய்த இதயத்திற்க்கு
நான் எங்கு போவேன்??

உன் பார்வை சொட்ட சொட்ட ,
உன்னுள்ளே மூழ்கி போனேன்..

அன்பின் மிகுதியும்,ஆயுளின் பகுதியும்
சேர்த்து தருவேன். உன் காதலுக்காக..

நிமிட முள்ளுடனும்,நொடி முள்ளுடனும்
போராடி வென்று
தினமும் உந்தன் பூ முகம் காண
காதலுடன் காத்திருப்பேன்..

அன்று நீ தவற விட்ட பேருந்தைப் பிடிக்க ஓடோடி வந்தாய்..
போர் முனையில் பூக்களெல்லாம் ஒன்றாய் என்னை
கொல்ல வருவது போலே இருந்தது..
சமாதான தூதாக என் இதயம் கொடுத்து அனுப்பினேன்..
நம் சமரச உடன்படிக்கையில் நீ கையெழுத்து இடுவது எப்போது??

உன்னை காதலிக்க வேண்டும்..
இப்போதே காதலிக்க வேண்டும்..

பவுர்ணமி இரவில்
யாரும் இல்லா தீவில்
நிலவோடு உன்னை சேர்த்து அணைத்து
நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு
காதலிக்க வேண்டும்..

மழையில் நீ நனைந்து வருகையில்
உன் தலை துவட்டி ,
உன் தலை கோதி ,
உன்னை காதலிக்க வேண்டும்..

என்னோடு கோபம் கொண்டு
விலகி போகையில்
உன்னை சமரசம் செய்து காதலிக்க வேண்டும்..

என் இதயம் உன்னை நினைத்து நினைத்து துடித்த அத்தனை கணமும்
மீண்டும் மீண்டும் உன்னை காதலித்தேன்..

Sunday, July 15, 2007

நிலாச் சோறு

அறியா வயதில் ,
அன்னை மொழி மட்டும் விளங்கும்
பருவத்தில் ,
மாதக்கணக்கில் வயிற்றில் சுமந்தவள் ,
இறக்க மனமில்லாமல் ,
வருடங்களாய் இடுப்பில் சுமந்த காலத்தில் ,
இரவு நிலவை ,பொம்மை பொருளாய்க் காட்டி ,
சோறு ஊட்டுவாள் ..

அவள் சொல்லும்
பாட்டி வடை சுட்ட கதையும் ,
நிலா கதையும் ,
பூச்சாண்டி கதையும் அன்று எனக்கு
ராமயணம் ,மகாபாரதம்..

விடிந்த பொழுதில்
நிலவில்லையேல்
ஊண் உண்ண மறுக்கும் என்னை
சமாதானப்படுத்தும் பொறுமை
கடலுடன் போட்டி போடும் ..

முகம் அறிந்த வயதில் ,
வழிந்தோடும் உறக்கத்தை
மெல்ல விலக்கி விட்டு ,
காலை நேர அலாரமாய் ஒரு முத்தம் தந்து என்னை எழுப்புவாய்..

உன் முகம் மறையும் தருணத்தில்
வெளியேரும் கண்ணீரை
கையில் ஏந்தி ,
"அம்மா மதியம் சாப்பாடு கொண்டு வரேன் டா" என
வார்த்தை கைக்குட்டையை கொடுப்பாய்..

எனக்க்காய் நட்ட நடு வெயிலில்
சாப்பாட்டுக் கூடையுடன்
காத்து நிற்ப்பாய்..
மதிய வேளையில் தான் உணவு உண்ண வேண்டும் என்னும்
பழக்கத்தை கொண்டு வந்தவனை
நிற்க்க வைத்து சுடத்தோன்றும்
அவள் வியர்வை துளிகளைக் கண்டால்..
என் வெற்றுக் கதைகளைக் கேட்க
உன்னை விட சிறந்த தோழி
உலகில் எவரும் இல்லை ..

பருவ வயதில் ,அரும்பு மீசை முளைத்த காலத்தில்
காதல் போதையில் ,பருவ நெருப்பில் ,
நண்பர்களின் களிப்பில் ,
ஆயிரம் தவறுகள் செய்த போதும் ,
ஊர் என்னை ஏசியபோதும் ,
"சாப்பிட்டியாடா" என்னும் ஒரு சொல்
மற்றவற்றை கொன்று விடும்..

அலுவுலகம் செல்லும் வயதில் ,
என் உலகமே அலுவுலகமாய் இருக்க
உன் அலுவலே எனக்காய் காத்திருப்பதாய் கொண்டாய்..

இன்றுஉலகம் அறிந்த வயதில் ,
நிலவுண்டு,
சோறுண்டு ,
தாய் இல்லை ..
100 வகை உணவு வகைகளில் ,
1000 ரூபாய்களில் உள்ள ருசி ,
உன் ஒரு பிடி சோற்றுக்கு ஈடாகாது..
ஏனென்றால்
ருசியோடு பாசத்தையும் சேர்த்து
பிசைந்து தரும் வரம் தாய் ஒருத்திக்கு மட்டுமே..

உற்றம் பேச்சைக்கேட்டு
முற்றும் இழந்த
ஓர் மகனுக்காய் ,
எதோ ஓர் முதியோர் இல்லத்தில்
எனக்காய் உருகும்
என் தாய்
உலகில் சிறந்தவள்..

காதல் வந்துவிட்டது..

ரெட்டை ஜடை போடதே
என் ரெட்டை விழிகள்
உன்னை விட்டு விலக மறுக்கிறது..

ஏ மல்லிகை தோட்டத்து சொந்தக்காரி
உன் தோட்டத்து பூக்கள் அழகாய் பூப்பதன் காரணம் கண்டேன்..
அவை தினமும் சிரிக்க பழகி கொள்கின்றன
உன்னைக் கண்டு..

உன் மூச்சுக் காற்று ஒன்று போதும்
ஐஸ் கட்டிக்கும் ஜலதோஷம் பிடிக்கும்..

நீ
பூக்கள்,
மழை என எதன் மேலும் நேசம் வைக்காதே!!
உன்னை விட அவைகள் அழகெனகர்வம் கொள்கிறது பார்!!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்!!
உண்மைதான்..
இல்லையென்றால் என் முறை பெண்கள் மேல் வராத காதல்
உன் மேல் வந்திருக்காது..

நீ என்ன நூலகமா??
உன்னைப் படித்து படித்துஎன் கவித்திறனை வளர்த்துக்கொள்கிறேன்??

அடடே உன் கவிதை அருமை!!
நீ அடித்தல் திருத்தலுடன் எழுதி
கசக்கி எரிந்த தமிழ் கட்டுரையை தான் சொல்கிறேன்..

ஆயுள் முழுதும் நான் ஓர் மாணவனே
உன் கண்களைப்படித்துக்கொண்டே!!

தயவு செய்து உன் வீட்டு சமையல் கரண்டியில் நீ ருசி பார்க்காதே!!
பிறகு எல்லா உணவும் இனிப்பு பலகாரமாய்மாறி விடப் போகிறது!

ஒரு நாள் நீ
உள்ளிருந்து மழையை ரசித்துக்கொண்டிருந்தாய்..
வெளியிலிருந்து மழை உன்னை ரசித்துக்கொண்டிருந்தது..

உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த பூக்களை பழி தீர்க்க துடிக்கிறேன்..
உன் கூந்தலை முத்தமிட என்ன துணிவு பார்த்தாயா??

உன்னை மேலும் கீழும் உற்றுப்பார்க்கிறேன்
என கோபம் கொள்ளாதே..
சுடிதார் அணியும் நவயுக தேவதையை
இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்..

புது யுகம் படைப்போம்..

ஆண்டாண்டுகளாய் ஓடிய
மாசு படிந்த நீரோடை போதும்..
இனி புது நீர் பாய்ச்சுவோம்..

காலப்போரில் சமரச பேச்சிற்க்கு அமர்வது போதும்..
இனி நெஞ்சுயர்த்தி போருக்கு தயாராவோம் வா..

நாட்டின் விதி எழுதும் தாள் இருந்தால் தாருங்கள்..அ
டித்தல் திருத்தலுடன் நீங்கள் எழுதிய விதியை ,
அடி வேர் வரை
மாற்றி,
திருத்திக்
காட்டுகிறோம்..

பள்ளி ஏட்டில் படித்த
"அச்சம் தவிர்"இன்னமும் அவ்வேட்டிலேயே
ஒடுங்கி கிடக்கின்றன..
அதை செயல் முறையில் கற்று தரும்
யுகம் படைப்போம் வா..

காலச்சக்கரத்தில்
நிமிட முள்ளாய் இருந்தது போதும்..
வினாடி முள்ளாய் விரைவோம் வா..

இல்லை என்ற சொல்லை ,அகராதியிலிருந்து எறிவோம்..
இனி உண்மைக்கு மட்டுமே விலை போவோம்..
விடுமுறையை கொண்டாட நிலவிற்க்குச் செல்வோம்..

"எதிர்கால இந்தியா"என ஆயிரம் ஆண்டுகளாய்
காண்கின்ற கனவை ,
நாமாவது நனவாக்குவோம்..

கை ஏந்தி நின்றது போதும்..
இனி கை கொடுத்து உத கற்றுக்கொள்வோம் வா..

அனுபவங்களை துணைக்கு அழைத்துக் கொள்வோம்..
அறிவுத்திறனை செயல் முன் வைப்போம்..
புதிய முயற்சிகளுக்கு தோள் கொடுப்போம்..
வாருங்கள் புது யுகம் படைப்போம்..

Monday, June 4, 2007

வறண்ட தேசம் ..

இப்ப கம்ப்யூட்டர் ,மென்பொருள் எல்லாம்
கடை வீதி பொருளாச்சு..
அரிசியும்,கோதுமையும்
கண் காணா பொருளாச்சு..

நெலத்துக்கு பாய்ச்ச தண்ணீ இல்ல,
நா வறண்டு போகும் என் நெலத்தப்பாத்து
என் கண்ணீர தான பாய்ச்சனும்..

சொந்த பந்தம் எல்லாம் பொலப்புக்கு
வேற ஊரு போக..
என்ன பெத்த ஆத்தா இந்த ஊரு
அத விட்டு போக நான் என்ன பட்டணத்து
கம்ப்யூட்டர் மனுஷனா??

கஷ்டமுனா ,சந்தோஷமுனா
சொந்தமுனு சொல்லிக்க ஆயிரம் பேர் இருந்தாங்க..
இனி என் புல்லைங்களும் தூரத்து சொந்தமா மாறிடுமோனு
பயம் வந்துடுச்சு..

தொழிற்சாலையெல்லாம்
ஊருக்குள்ள காலடி எடுத்து வெக்க
மரமெல்லாம் மிதிச்சு கொன்னுபுட்டீங்க..
அந்த கோவத்த தான் சூரியன் காட்டுதுனு
உனக்கு வெலங்கலயா??


அந்தி சாயிர நேரத்துல
ஆலமரம் கீழ தலை சாய்வேன்,
அது காத்தோட , தாலாட்டு பாட
கண் அசந்து நான் தூங்குவேன்..
இனி என் புல்லைங்களுக்கு
காத்து வாங்கவும் காசு கொடுக்கனுமோ??

இனி
தாய்பாலும்,
தாலாட்டும்
தடம் தெரியா வார்த்தையா போனாலும்
ஆச்சர்ய பட இங்கு இல்ல..

அணை கட்ட வந்தவங்க
அடிச்சு போட்டு போயிட்டாங்க..
பாலம் கட்ட வந்தவங்க
பள்ளம் தோண்டி தந்தாங்க..
தொழில் தொடங்க வந்தவங்க
பள்ளத்துல தள்ளியும் விட்டாங்க..
இன்னும் கொஞ்ச நாள்ல என் நாடி எல்லாம்
ஓஞ்சு போய் நான் இறப்பேன்..
அந்த 6 அடி 3 அங்குலம் ஆது என் புல்லைங்களுக்கு
முழுசா தருவீங்களா??

Sunday, June 3, 2007

மனித உணர்ச்சிகள்..

மனிதன் - கடவுளின் படைப்புகளில் சிறந்த படைப்பு.
அவனிடமிருந்து வெளியேரும் உணர்ச்சிகள் ஏராளம்.
அவற்றின் காரணங்கள்,தன்மை ஏராளம்.அவற்றில் சில..

சிரிப்பு:
மகிழ்ச்சியின் வாசற் கதவு..
இலவசமாய் கிடைக்கும்
விலைமதிப்பற்ற நகை..
விருந்தாளியின் வரவேற்பறை..
நோய்களின் களித்தல் கணக்கு..
ஆயுளின் கூட்டல் கணக்கு..
கூட்டாளிகளுடன் சேர்ந்தால் பேசும் ஒரே மொழி..

கோபம்:
மனிதனின் எரிமலை சீற்றம்..
எதிர்பார்ப்பின் எதிர்ப்பு..
உரிமையின் இருப்பிடம்..
கண்டிப்பின் கானம்..
ஆளைக்கொல்லும்
சொந்த வீட்டு உறவுக்க்காரன்..

கண்ணீர்:
துக்கத்தின் அணைப் பெருக்கு..
குழந்தையின் காலிங் பெல்..
சகரா(sahara) பாலைவனத்தில் மழை..
புத்திக்கும் ,மனத்திற்க்கும்
போர் நடந்து,மனம் வென்று
போரில் வெளியேரும் குருதி..

மெளனம்:
உணர்ச்சியற்ற் உணர்ச்சி..
அயிரம் அர்த்தம் கொண்ட மொழி..
சில நேரங்களில் இந்த சொற்களுக்கு
வலு அதிகம்..
ஊடலின் தேசிய மொழி..
மனம் ஓய்வெடுக்கும் அறை..
கண்கள் மொழி
பெயர்க்கும் உணர்ச்சி..


ஆச்சர்யம்:
கேள்வியின் பிறப்பிடம்..
புதுமையின் வெற்றி..
ஆர்வத்தின் தீ..
அதிர்ச்சியில் அசை போடப்படும் அரிசி..
கவிஞ்ர்களின் கற்பனை தூண்டுதல்..

Saturday, June 2, 2007

சின்னதாய் சில பொய்கள்..

1.
ஏய் காதலி!!!
நீ மட்டும் நிலவின் அருகே நிற்காதே..
உன்னால் நிலவின் அழகு குறைகிறது பார்..

2.
அந்தோ பரிதாபம்!!!
அந்த பூக்களைப் பார்..
உன் கூந்தல் அழகைக்கண்டு
வெட்கி தலை குனிந்து விட்டன..(வாடுதல்)

Friday, June 1, 2007

காதல் வலி - 2

என் பேனாவிலும் காதல் வலி
,மை கொடுக்க மறந்து
குருதி கொட்டியபோது..

கைகளிலும் காதல் வலி ,
உன்னைக் காணாத நாட்களை
நாட்காட்டியில் கிழிக்கும் போது..

இதழ்களிலும் காதல் வலி ,
உன்னை உள்ளே புதைத்து
வெளியே சிரிக்கும்பொழுது..

கண்களிலும் காதல் வலி ,
நம் காதல் பாதங்கள்
பதித்த இடங்களை காணும்போது..

இதயத்தில் காதல் வலி ,
நீ என்னை விட்டு அரை அடி நகரும் முன்
என் ஒரு துளி கண்ணீர் பூமீ சேர்ந்தபோது..

புத்தி காதலித்திருந்தால்
அறிவுரை சொல்லி திருத்தியிருப்பேன்..
மனம் காதலித்து விட்டது
அவஸ்த்தையை அனுபவித்தே மாயும் ..

விரல் தொடும் தூரத்தில் இருந்த போது விளங்கவில்லை ,
இந்த காதலின் வலிமை..
விழி தொடும் தூரத்திலேனும் தெரிவாயா ,
என ஏங்கும் போது தெரிந்தது காதலின் வலிமை..

உன்னோடு இருந்த வரையில்
எல்லமே ஓர் அழகு..
இன்று அழகென்ற சொல்லும்
அவஸ்தையாய் மாறியதேன்..?

இந்த உடலில் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது என்று தெரிந்தால் ,
எடுத்து களைந்து விடுவேன்..
உடலில் எல்லா பாகத்திலும் நம் காதல் தெரிகிறதே ,
என் உடலை எரித்து விடவா??

கடவுள் கண் முன்பு தோன்ற ,
வினா ஒன்று கேட்பென்
காதலை யார் கண்டுபிடித்தது? என்று..

மனம் இறந்த இவ்வுடலில்,
என் ரத்த நாளங்களும் ஊமை ஆகிப்போகும்
தருணத்தில் ,
உனக்காய் காத்திருப்பேன்
உன் மெளன மொழியேனும் கேட்க..
வருவாயா??

ரோஜா-பெண்கள்

ரோஜாவில் முள்..
அழகில் தான்
ஆபத்து உள்ளது எ
ன்பதை உணர்த்த..

எதிர் வீட்டுப்பெண்..

உன் வீட்டு கம்பியில்
காயும் துணி போல ,
நானும் மாலையில்
உனக்காய் காத்திருந்து காய்ந்து போவேன்
உன் முகம் காண..

மாலையில் நீ கோலம்
போட வருவாய்..
புள்ளிகளுக்கிடையே வளைந்து நீ போடும்
கோலம் போல ,
நட்புக்கூட்டம் இடையில் என் பார்வை வளைந்து
உன்னை கோலம் போடும்..

வாரம் ஒரு முறை கோவில் முகப்பில்
நீ ஏற்றும் தீபம் போல ,நானும் எரிவேன்
மீதம் உள்ள 6 நாட்களில் .

.மளிகை பொருட்கள் வாங்ககடை வீதி வருவாய்..
உனை அருகிருந்து ரசிக்க
நேற்றோடு நான் வெற்றாய் வாங்கியது 137ஆவது பேனா ..

நானும் சிறந்த நடிகன் ஆகி விடுவேன்,
உன்னிடம் என் காதலை எப்படி சொல்வது என
பல நூறு முறை ஒத்திகைப் பார்த்தே..

தோழிகளோடு நீ சிரித்து விட்டு போகையில்
ஒரு பார்வையை நான் உன் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் கவிப்பணிக்கு வேளை பளு அதிகம் ..
ஒரு பார்வையை நீ என் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் காதலுக்குபொங்கல்,தீபாவளி போனஸ்..

நம் விழிப்போரில்
தோற்பது யாராய் இருப்பினும் ,
வெல்லப்போவது நம் காதலாய் இருக்கக் கூடும்..

என் இதய கண்ணாடியை
ஒரு முறை வந்து பார்த்து விட்டுப் போ..
நீயும் நானும் தெரிவோம்..
வெட்கத்தில் நீ சிரித்து விட்டு போகையில் ,
கண்கூசி கண் அடைக்கும் என் இதயம்..

நம் காதலை அரங்கேற்றும் வேலையில்
விடுமுறை தினமாய் அனுசரிக்கப்படும்
என் கனவுலோகத்திற்க்கு..

காதல் வலி..

உயிரைக் கொல்லும்
அம்பு அவள் கண்களில்
இருந்து வெளியேறியது என அன்று நான் கண்டிருக்கவில்லை..

காதல் வர்ணங்கள் பல
சேர்த்து பூசும்,
இறுதியில் நிலைப்பது
ஒரே வண்ணம்
நிழல் வண்ணமே !!

ஆசை வார்தைகளும் ,
ஜாடை பேச்சுக்களும்
காதலை சொல்ல எனை உந்த
"ச்சீ நீ இப்படிப்பட்டவனா? என்னும்
சொல்லின் முடிவில் என் மனம் நொந்தேன்..

காதல் நாடகத்தில் ஒப்பனை கலைத்துச் செல்வாள் அவள்..
அவள் போகையில்
என் ஒப்பனை மட்டும் அல்ல
என்னை நானே கரைத்து ,கலைத்து கொல்வேன்
என் கண்ணீரில்..

பார்க் பெஞ்சிலும் ,கடற்கரையிலும்
காதல் மமதையில் கழித்தபோது
காவலாளி சொல்வான்
"சீக்கிரம் வெளியேறு" என்று
அது காதல் வலியில் இருந்து தப்பிக்க
சொலப்பட்ட எச்சரிக்கை பலகை என அறிந்திருக்கவில்லை
இது என் திருமண பத்திரிக்கை என நீ கொடுக்கும் வரை..

உலகில் உள்ள ராமனை எல்லாம்
கண்ணனாய் மாற்றிக்கொண்டிருக்கும்
காலம் இது
காதல் இது..

ஆர்பாட்டமாகவும் ,
ஆராவாரத்துடனும் ,
தொடங்கிய என் காதல்
அமைதியாகவும்
அழகாகவும்
முடிந்தது
அவள் திருமணத்தில்..

காதல் வலையில்..

என் விழி பார்வை
உன்னை முத்தமிட்டதும்
காதல் கொண்டு அரைந்தாய்
அதன் காயங்கள் என் இதயத்தில்

ஆயிரம் சிரிப்பொலியின் மத்தியில்
உன் ஒரு மவுனம்
என்னை சாய்த்ததே ..

என் காம்பு மீசைக்கும்
உயிர் கொடுத்தவள் நீயே

தினமும் காலை
என் பார்வை உன்னை தொட கூடாதென
ஆலமரத்தில கட்டி வைத்தார் போல்
வருவேனே..
ஆனால் அவை வேரோடு பிய்த்து
கொண்டு வரும் உனை காணும்போது ..

உன் ஓர விழி பார்வையுடன்
போராடி
போராடி
இதயத்தில் குத்து பட்டு
வீர மரணம் அடைவேன் ..

உன்னிடம் எழுதுகோள்
பெறவே
என்னிடம் உள்ள பேனாக்களை
பல முறை கொல்வேன் ..

மாலையில் சூரியன்
சிவப்பதெல்லாம் ,
உன்னை பிரியும் தருணம்
வந்து விட்டது என்பதால்
வந்த கோபமோ?

நவீன யுக அலாவுதீனும் அற்புத விளக்கும்

நவீன யுக அலாவுதீனும் அற்புத விளக்கும்
(ஓர் கற்பனை)
தூசிக்கூட்டுக்குள் வீடு கட்டி கொண்டு வாழும் ,
தாடி வைத்த இளைஞ்சன் கையில்
ஓர் அற்புத விளக்கு கிடைக்க
பூதத்திடம் பலவற்றை கேட்டான்

தூசி அற்ற வீடு ,
தினம் ஒரு புத்தாடை ,
வெண் மேக மெத்தை ,
வீட்டிற்குள் வானம் ,
அதன் மத்தியில் ஓர் நிலவு என ..

எல்லாம் கிடைக்க உறக்கம் மட்டும் கடத்தி சென்று விட்டாளே ,
எப்படி உறங்குவது என புலம்ப..

யாரது குரு??
அவளைப் பற்றி சொல்லுங்கள் என பூதம் சொல்லியது

அவள் பெயர் அக்ஷயா
அள்ள அள்ள குறையாஅழகு
வெண் தாமரை உடல்
சூரியனும் தோற்றுப்போகும் சுட்டெரிக்கும் பார்வை
இரவிலும் கிடைக்காத குளிர்ந்த சிரிப்பு
பிரம்மன் அவளை வடித்து வடித்து கற்பனை தொலைத்த அழகு ..

ஆனால் ...

அதற்குள் ஆர்வம் தங்காமல் பூதம் செல்ல..
அவளை கண்டது..
சொன்ன அடையாளங்களுக்கு அவள் ஏற்றாவளா?
அல்ல அடையாளங்கள் கொண்டு செய்யப்படவளா??
என பிரிதது அறிய முடியா அழகு

காதல் வயப்பட்டு பூதம்
தன் காதலை சொல்ல ,
அவள் கட்டிவிட்டால் கையில் ராக்கி கயிறு
வருத்தத்துடன் ஒரே ஒரு கேள்வி கேட்டது

உன் அழகில் மயங்கியவர் லட்சம் பேர் இருப்பார்
உன் சிரிப்பில் மயங்கியவர் ஆயிரம் பேர் இருப்பார்
உன் பேச்சில் மயங்கியவர் நூறு பேர் இருப்பார்
ஆனால்
என் ஒருவனுக்கு மட்டும் ராக்கி கயிறா?

இல்லை அண்ணா நீங்கள் என் 76ஆவது அண்ணன்,
எனக்கு மணம் ஆகி விட்டது என முடிக்க
தாடி முளைத்து பூதம் ஜாடிக்குள் சிறைகொண்டது மீண்டும் ..

நாட்குறிப்பு..

நாட்குறிப்பு..

எதிர்காலமும்
கடந்தகாலமும்
அறிந்த ஜோசியன் அவன்..

சிலரது தினம்
உன்னிலே தொடக்கம்..
சிலரது தினம்
உன்னிலே முடியும்..

மகிழ்ச்சியில் அலங்கரிக்கப்படுவாய்..
துன்பங்களில் கரைக்கப்படுவாய்..

நீயும் ஒரு அரிய மலர் போலவே..
ஆண்டுக்கு ஒரு முறை புதிதாய் பூத்துக் கொண்டிருக்கிறாய்..

ரகசியம் சொல்..?
உனக்கு மட்டும் தான் வயது ஏற எற மீண்டும் பிறக்கும் வாய்ப்பு..

காதலர்களுக்கு ரகசிய வங்கி..
கவிஞர்களுக்கு கவிதை ஏடு..
வியாபாரிகளுக்கு கனக்குகளை சேகரிக்கும் கணினி..
மாணவர்களுக்கு அரசு விடுமுறை தாங்கும் குதூகலம்..

உனக்கும் எனக்கும் தாய் ,குழந்தை உறவே..
என்ன வித்தியாசம் என்றால்??
தினமும் நான் உன்னிடம் கதை சொல்லி
நானே உறங்குவேன்..

காதலியோடு கைகோர்த்து போகையில்:

காதல்..
அந்த மூன்றெளுத்து வார்த்தையில்
பல கோடி உயிர்களும்..
சில கோடி கவிஞர்களும்..
அதனுள்ளே சரண்..

நீ..
இந்த ஒரு எழுத்து வார்த்தையில்
என்
பல கோடி உயிர் அணுக்களும்..
சில கோடி ஆசைகளும்..
உன்னுள்ளே சரண்..

அட எங்கே நீ துவாரம்கண்டுபிடிக்கிறாய்??
எப்படியும்
இதயத்தில் நுழைந்து விடுகிறாயே..
உன் முதல் ஊடகம் கண்களா??

உனக்கு, அனுமதி இல்லை
பலகை எல்லாம் நிதர்சனம்
எப்படியும் நுழைந்து விட்டாய்..

நீ நுழைகையில்
உன் கனவு உலகத்தில் பறக்க
இறக்கைகளும் கொடுத்து விடுகிறாய் போலும்??

கண்களில் நுழைந்து
இதயத்தில் அமர்ந்து
ரத்த நாளங்களில் ஓடி
மூளையில் களித்து
உடலெங்கும் நீயே..
இப்போது என்னில் நீயா??
அல்ல உன்னில் நானா??

இப்பொதேல்லாம் நானும் அழகாய் தெரிகிறேன்..
உன் காதலோடு கண்ணாடி முன் நிற்பதால்..

விடை பெறும் தருணம்..
அந்த சுட்டு விரலில்
உயிர் இருப்பதை இன்று தான் கண்டேன்..
நீ அதை விடுத்து போகையில்..

2 மணி நேரம் உன்னிடம் பேசினேன்..
ஒன்றும் நினைவில்லை..
போகையில் பார்த்த அந்த பார்வை
பல நூறு வருடங்கள் நிலைக்கும்..

நீ அருகில்..
உடலெல்லாம் நெருப்பாய்..
நீ விலகினாய்..
உடலெல்லாம் குளிர்கிறது..
ஆம் உன்னைப் பிரிவதால் இதயம் கண்ணீர் வடிக்கிறது..

நீ விடை பெற்ற பின்
உன் பாதம் பட்ட
கடலில் குளித்தேன்..
புண்ணிய நதியில்
குளிப்பது நல்லதென
என் அம்மா சொல்லி இருக்கிறாள்..

மாற்றங்கள் வேண்டும்

மாற்றங்கள் வேண்டும்

அதே விடியல்
இன்று எப்படி இருக்கும்
என்னும் பயத்தோடு!!

அதே தேநீர்
சர்க்கரை குறைவாய் இருந்தாலும்
பருகும் சகிப்பு தன்மை!

அதே காலை மலர்!!
ஒரு கற்பழிப்பு
ஒரு கொலை
ஒரு கொள்ளை
செய்தி படிக்காவிட்டால்
அன்றைய தினம் முடம்..

அதே பேருந்து
பேருந்தில் மட்டுமே வீரம் காட்டும்
படிகட்டோர பயணம்!!

அதே முகங்கள்!!
போலி சிரிப்பு
பிழையான உறவுகள்
முக முடி போட்ட மனங்கள்

இரவில் ஒரு செய்தி
உறங்க மறுக்கும் மனத்திற்கு சில பாடல்கள்,
மாதம் ஒரு திரைப்படம்,
வாரம் ஒரு கோவில்,
பண்டிகை தினத்தில் தொலைக்காட்சி முன் மரணம்,
4 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் போல் சொந்த ஊருக்கு ஓர் பயணம்..

மாற்றம் வேண்டும்

பச்சை புல்வெளியில் படுக்கை ,
ஆடையற்ற நித்திரை ,
விழிக்கும் வரை உறக்கம் ..

மரமேறி தேநீர் பருக மரங்கள் ,
தேவதைகள் பரிமாறும் தேநீர்

சிரிக்க மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் செய்திகள் ,
குழந்தை முகம் அணிந்த மனிதர்கள்

சேற்றில் நடனம் , மழையில் களிப்பு
ஒற்றை அடி பாதையில் பயணத்தின் கவனம்

நிமிடம் ஒரு முறை புரட்டி போடப்படும் உலகம் ,
அடுத்த நொடியில் மறைந்து இருக்கும் மர்மம்..

இப்படி போக வேண்டும் உலகம்..
இது கனவு காணவே சமயம் ஒதுக்கும் உலகம்!!

அடடா இதோடு என் அவசர வாழ்வில்
கனவு காணும் சமயம் முடிந்து விட்டது
மீண்டும் நாளை என் கனவு உலகத்தில் சந்திக்கிறேன்..

கவிதை எழுதத் தான் ஆசை!!

கவிதை எழுதத் தான் ஆசை!!

கவிதை எழுதத் தான் ஆசை!!
அவளுக்காக கவிதை எழுதத் தான் ஆசை!!

முடிவெடுத்தேன்!!முனைந்தேன்!!

வெள்ளை காகிதங்கள் கண்ணாடி முன்பு!!
அருகில் சென்று விசாரித்ததில், அவளுக்கான கவிதையை விட
இவைகள் அழகாய் தெரிய வேண்டும்
என் அலங்காரமாம்!!

சற்று நகர்ந்தேன்!!
பேனாவின் ஒரு பகுதி சுவற்றில் முட்டி மோதி
தன்னை கூர்மை படுத்திக்கொண்டிருக்க!!
மற்றொறு பகுதிவானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தது,
வானத்தின் நீலம் கசிய,
அதை தன்னுள் நிரப்ப!!

ஒரு வழியாய்
சமாதானம் படுத்தி அமர்ந்தேன்,ஆயுதங்களோடு!!

உதட்டில் தமிழ் சொற்கள்
ஒன்றோடு ஒன்று
போர் தொடுக்க..
முதலில் வெளியேறி விட
வழக்காடிக் கொண்டிருந்தது!!

அவைகளுக்குள் சமரசம்
செய்து விட்டு

எழுதுகோலும்,
காகிதமும்
சங்கமித்து
கவிதை பிள்ளை பெற
முனையும் அந்த
ஆனந்த சங்கமத்தில்
என் கைகள்
என்ன எழுதவிருகின்றன
என எல்லாம் ஆவலோடு காத்திருக்க
எழுதி முடித்தேன்
என் கவிதையை

"தனுஜா" என்று
அவள் பெயரை!!

Saturday, May 26, 2007

கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

கண்மணி உனக்காய் ஓர் கவிதை..

என்ன செய்து பூலோகம் வந்தாய்?
அங்கே தாடி,மதுவுடன்
பிரம்மன் புலம்புகிறானமே??

அழகான புயல் நீ ,
என் கரை கடந்து விட்டாய்..
ஆனால் இன்னும்
நனைந்து கொண்டே இருக்கின்றேன்..

வாரிவாரி கொடுத்து
செல்வந்தன் ஆகும் இத்தொழிலில்
காதலைக் கொடுத்தே
உன்னைப் பெற்றேன்..

வரம் கொடு ,
பிரித்து தைத்த அந்த
இரண்டு கருப்பு வானவில்லில்
ஓர் புள்ளியாய்யாவது இருக்க ஓர் இடம்..
உன் நதியில் ஓர்
காய்ந்த சிறகாய்..
எப்போதும் உன்னை உரசி,உன்னுடன் பயணிக்க,,

அழகின் பிறப்பிடத்தில் நீ!!
அவஸ்தையின் இருப்பிடத்தில் நான்!!
காதலின் இறப்பிடத்திலும் நான் உன்னை காதலித்துக்கொண்டே தான் இருப்பேன்!!

மாதம் ஒருமுறை
நிலவிற்க்கு விடுப்பு கொடுப்பது ,
நீ பூமியில் உள்ளாய் என்னும் துணிவிலா?

சாய்ந்து பார்க்காதே..
பனைமரமெல்லாம் கொடை சாய்கிறது பார்
உன்னை ரசிக்க!!

அவள்: சீ பொய் சொல்லாதீர்கள்

அவன்: கள்ளி கண்டுபிடிச்சுட்டியே !!

எதிர் வீட்டுப்பெண்..

எதிர் வீட்டுப்பெண்..

உன் வீட்டு கம்பியில்
காயும் துணி போல ,
நானும் மாலையில்
உனக்காய் காத்திருந்து காய்ந்து போவேன்
உன் முகம் காண..

மாலையில் நீ கோலம்
போட வருவாய்..
புள்ளிகளுக்கிடையே வளைந்து நீ
போடும் கோலம் போல ,
நட்புக்கூட்டம் இடையில் என் பார்வை வளைந்து
உன்னை கோலம் போடும்..

வாரம் ஒரு முறை கோவில் முகப்பில்
நீ ஏற்றும் தீபம் போல ,
நானும் எரிவேன்
மீதம் உள்ள 6 நாட்களில் ..

மளிகை பொருட்கள் வாங்க
கடை வீதி வருவாய்..
உனை அருகிருந்து ரசிக்க
நேற்றோடு நான் வெற்றாய் வாங்கியது
137ஆவது பேனா ..

நானும் சிறந்த நடிகன் ஆகி விடுவேன்
,உன்னிடம் என் காதலை எப்படி சொல்வது
என பல நூறு முறை ஒத்திகைப் பார்த்தே..

தோழிகளோடு நீ சிரித்து விட்டு போகையில்
ஒரு பார்வையை நான் உன் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் கவிப்பணிக்கு
வேளை பளு அதிகம் ..
ஒரு பார்வையை நீ என் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் காதலுக்குபொங்கல்,தீபாவளி போனஸ்..

நம் விழிப்போரில்
தோற்பது யாராய் இருப்பினும் ,
வெல்லப்போவது நம் காதலாய் இருக்கக் கூடும்..

என் இதய கண்ணாடியை
ஒரு முறை வந்து பார்த்து விட்டுப் போ..
நீயும் நானும் தெரிவோம்..
வெட்கத்தில் நீ சிரித்து விட்டு போகையில் ,
கண்கூசி கண் அடைக்கும் என் இதயம்..

நம் காதலை அரங்கேற்றும் வேலையில்
விடுமுறை தினமாய் அனுசரிக்கப்படும்
என் கனவுலோகத்திற்க்கு..

Saturday, April 14, 2007

கல்லூரி நாட்கள்..

கல்லூரி நாட்கள்..
இலைகளாய் நுழைந்தோம்!!
மரங்களாய் நிற்கின்றோம்!!
வேர்களாய் நம் நட்பு!!
நாட்காட்டியில் தேடி கொண்டிருக்கிறேன்
நாம் சிரிக்க மறந்த நாட்களை,
அட என்ன விந்தை
நான்கு ஆண்டுகளாய் அதற்கு விடுமுறை!!
கல்லூரி அத்தியாயத்தில்
முற்று புள்ளி வைக்கும் அந்த கடைசி தினத்தில்
கண்ணீரை கொண்டு அதை தொடர் கதை ஆக்க முயன்று
தோற்றுப் போனேன்..
அவர்கள் தந்த பாடம் எல்லாம் படித்தே முடித்தோம்
மதிப்பெண் பெற்றோம்!!
இலவச இணைப்பாய் மனித மனங்களையும் படித்தோம்
நண்பர்கள் பெற்றோம்!!
சில மனங்களை படிக்க முயன்று தோற்றோம்!!
இன்றோ அத்தோல்விகளை நினைத்து சிரிக்கும் தருணம்!!
அந்த நாட்களில்
படித்து
படித்து
களைத்த கண்களுக்கு
அப்பகுவமற்ற காதலால் கிடைத்த
அவள் முகமும்
அவள் மறந்து விட்டு போன கைக்குட்டையுமே ஆறுதல்!!
அந்த நாட்களில்
எல்லாமே என்னிடம் என்னும் ஓர் எண்ணம் ..
கல்லூரி முடித்து திரும்பி பார்த்தேன்,
ஆள் இல்லா வீதியில் நான் மட்டுமே என்னும் ஓர் எண்ணம் ..
தேனீக்களுக்கு சவால் விடும் பருவம் அது!!
என்ன ..
தேன் உரிஞ்ச மட்டும் பக்கத்து வகுப்பறைக்கு செல்வோம்!!
கவிதை எழுதப்பட்ட மேசைகளுக்கும்..
நய்யான்டி கதைகள் எழுதப்பட்ட சுவர்களுக்கும்..
வண்ணம் தீட்டி மறைத்து விட முடியும்..
இதயத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை மறைக்க ஏது வண்ணம்??

அவள் உறங்குகிறாள்.....

நிலவு சாய்ந்தது..

ஒரு நாள் உற்சாகம்
முற்று பெற்று
"அசதியாய் இருக்கிறது டா " என
வெள்ளி தாமரை மெத்தை சாய,

உதட்டோரம் எறும்பு ஊர
சக்கரை கட்டி சுமந்து சென்றதை கண்டேன் அடி !!
ரணத்தில் நீ சிணுங்க
என் இதழ்கள் ரெண்டும் உனக்கு
பச்சை வைத்தியம் செய்தேனடி !!

ரோட்டோர கொசுக்கள் எல்லாம்
தேனீக்களாய் மாறியதேன்..??
உந்தன் தேன் குடிக்க வந்த போது
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்..

கண்மணி நீ உறங்க
பகலிலும் நிலவொன்றை
வாடகைக்கு எடுப்பேன்!!

குளிரும் உனை மெல்ல தீண்ட
கங்காரு போலே அடை காப்பேன் !!

கடவுள் கண் முன் தோன்ற
வரம் ஒன்று கேட்பேன் ,
உன் முகம் ஒன்று காண
சிலை ஆக்கி விடு என்று!!

சிறந்த பூக்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து
இதழ்கள் எல்லாம் சேர்த்து தைய்து
மெத்தை ஒன்று நான் செய்வேன்
வெண் மேகம் நீ தூங்க!!

சூரியன் உதிக்க தலை எடுக்க
அதன் தலையில் ஓர்
தட்டு தட்டி நான் அமர்வேன் !!

விண்ணில் பறக்க சிறகை விரிக்கும் பட்சிகளுக்கெல்லாம்
விடுமுறை கொடுத்து கூட்டில் அடைப்பேன்!!

வேதனை அற்ற முத்தம் ஒன்றை
நெற்றிப்பொட்டில் நான் குடுக்க
கண்விழித்து நீ பார்க்க
"இன்னும் நீ தூங்கலயா டா "என கேட்க
மீண்டும் ஒரு தாய் மடி வேண்டும் என உன் மடி சாய்வேன்!!

Thursday, March 8, 2007

சகோதரன் உறவு..

சகோதரன் உறவு..

உன்னிடம் ஒரு
சிறப்பு உள்ளது..
உன்னுடைய வன்முறையை
மட்டும் பல வருடங்களாய்
"மகிழ்ச்சியோடு" நினைவுகூறுகிறேன்..

நீ வானவில்லின் உதாரணம்..!
வானம் அழுது முடித்த பின்
நீ மட்டும் வண்ணமாய் ஒளிர்கிராய்..
வானமாய் நான்..
வானவில்லாய் நீ..
உன் பேச்சும்,நம்பிகையும் எனக்குள் வண்ணமாய்..

சேற்றில் புரண்டும்..
பேய் கதைகள் கேட்டும்..
குறும்புகள் செய்தும்..
ஒன்றாய் வளர்ந்தோம்..
ஆனால் நான் தாமதமாய் வந்து
பெற்றோரின் செல்லம் பெற்று விட்டேன் பார்த்தாயா??
இந்தப் பந்தயத்தில் தாமதமாய் வருபவருக்கே
அன்பு மிகுதி..

சகோதரன்..
அப்படி ஒரு உறவு நம்மிடம் இருந்திருந்தால்
என் பெற்றோறும் என்னிடம் கண்டிராத வலிகளை
உன்னிடம் கொடுத்திருக்க மாட்டேன்..
நீ சகோதர உறவோடு இலவச இணைப்பாய் கிடைத்த தோழன்..

உன்னுடன் இருக்கையில்
மகிழ்ச்சியும்,
ஆனந்தமும்,
கேலியும்,
குறும்பும்,
வாதமும்,
கோபமும்,
சோகமும்,
பரிமாற்றமும்
நம்மிடையே நேசம் என்னும் கயிற்றில்
ஊஞ்சல் கட்டிக் கொண்டு ஆடும்..

Saturday, March 3, 2007

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

21 ஆன்டுகளூக்கு முன்னால்..
இதே நாளில்
பிஞ்சுக் கதறலுடன் பிறந்தாய் நீ..
யவரையும் தெரியாது அப்போது உனக்கு..

இன்று அதே நாள்..
ஆம் இன்று உனக்குப் பிறந்தநாள்..

இன்றும் நீ ஒரு குழந்தையே..
ஆனால் இன்று நீ..
நிகழ்காலத்தின் மகிழ்ச்சியிலும்..
எதிர்கால்த்தின் ஆர்வத்திலும்..
உன்
தாயின் அரவணைப்பிலும்..த
ந்தையின் கண்டிப்பிலும்..
தம்பியின் சில்மிஷத்திலும்..
பூக்களோடு கடந்து கொண்டிருக்கிறாய் உன் பாதையை..

நானும் உன் பாதையில் ஒரு மைல்க்கல்லே
உன் பாதையில் பூக்கள் மட்டுமே இருக்க வாழ்துக்கிறேன்..
பாதையில் தெளிவு இல்லையென்றால் திரும்பி வராதே..கவலைக்கொள்ளாதே..
நான் மீண்டும் எழுவேன் ஒரு மைல்க் கல்லாக உனக்கு உதவ..

கடலைப் போல் மகிழ்சியும்..
வானம் போல் நிம்மதியும்..
உன் வாழ்வில் கிடைக்க வேண்டுகிறேன்..

கடலும்
காற்றும்
உள்ள வரை
நீ பிறந்த நாள் கொண்டாட வேண்டுமென விரும்புகிறேன்..

உனக்கு இன்று கிடைக்கும்
பூங்கொத்து வாழ்துக்களோடு
இவ்வொற்றை ரோஜா
வாழ்த்தையும் பெற்றுக்கொள்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இப்படிக்குபிரேம் குமார்..

எனக்கு கவிதை எழுதத் தெரியாது

எனக்கு கவிதை எழுதத் தெரியாது..
உலகில் உள்ள
கவிஞர்கள்,
புலவர்கள்
வர்ணிக்காத ஒன்றைப் பற்றி நான் வர்ணிக்கப்போவதில்லை
என் கவிதைக் கொண்டு..
ஆனால்

அவர்கள் வர்ணிக்க தொலைத்த வரிகளை
உன் இதழ்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த தாஜ்மகால் தூண்களை
உன் விரல்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த இரண்டு கருப்பு நிலாக்களை
உன் கண்களில் கண்டேன்..

கவலைப்படாதே கண்மனியே..
மறுபிறப்பு என இருந்தால்
மீண்டும் பிறப்பேன்..
உன்னைப்பற்றி வர்ணிக்க!!
உன்னைப்பற்றி மட்டும் வர்ணிக்க!!

பேருந்து தேவதை..

1.
நள்ளிரவு 12:00 மணி..!
மனைவியின் முதல் பிரசவ வேதனையை
காதில் கேட்டுக் கொண்டு நிற்க்கின்ற
கணவனைப் போல..

இந்த வருடமேனும் வான்மழை
பூமிப்பந்தை முத்தமிடாதா?
என ஏங்கும்விவசாயி போல..

இதழ்களுக்கும் சுவாசக் குழலுக்கும் உள்ள இடைவெளியில்
காம்பு முடி முளைக்காதா?எனக் காத்திருக்கும்
பாலகனைப் போல..

தாயின் நிழல் கருவிழிகளுக்கு எட்டாதா?
எனபசியில் இருக்கும் குழந்தைஅழுவது போல..

கிடந்தேன்..!கிடந்தேன்..!

உடலை பூமியிலும்உள்ளத்தை நிலவிலும்
தடம் பதித்து கிடந்தேன்..!
ஆம் நாளை காலை என்னவள்
பதில் கூறப் போகிறாள்..
நான் காகிதத்தில் கொடுத்த என்
இதயத்திற்கு..

மறுநாள்:
விடிந்தது..!
ஏனோ காக்காய்,குருவிகளுக்கும்
என்னவளின் முடிவு கேட்கும் ஆர்வத்தில்
வேகமாய் துயில் எழுந்ததாய் தோன்றியது..

முக்கால் சொம்பு தண்ணீரில்
நனைந்தும் நனையாமலும்
குளித்து முடித்தேன்..

தாயின் அரை கோப்பைத் தேனீரின்
அன்பையும் உதாசினப்படுத்தி
வீதியை நோக்கி 100 மைல்
வேகத்தில் செல்ல முனைந்தேன்..!

வீதியில்..!!
அழையா விருந்தாளி போல்
நண்பன்..
சில்லென்று சிதறியது
என் பாதங்கள் வேறு பாதை நோக்கி..

ஒரு வழியாக பூலோகச் சொர்கத்தை அடைந்தேன்..
ஆம்..அது தான் நான் அவளை தினமும்
சந்திக்கும் பேருந்து நிலையம்..!

என் கடிகாரம் அன்ன நடை இடுவதை
வருத்ததோடு நோக்கிக் கொண்டு இருந்தேன்..

இதோ காலைப் பொழுதில் மொட்டு
விரிவதைப் போல் என் சிற்பம் மெல்ல
மெல்ல நடந்து வந்துகொண்டிருக்கிறது..

2.
முதல் நாள்..

நேரமாகியும் வராத
பேருந்தை திட்டியபடி
திரும்பியது என் பார்வை எதிர் திசை நோக்கி..!

இன்று பகலில் பவுர்னமி போலும்..
பிரகாசமாய் இருந்தது அவள் வரும் திசை..

இதயம் பதை பதைத்தது..
அவள் நான் நிற்கும் பேருந்து நிலையம்
நோக்கி மிதந்து வருகிறாள்..

இதயம் அவள் நடை அசைவிற்க்கு
எற்றாற் போல் தபேலா வாசித்தது..

திட்டிய என் இதழ்கள் வேண்டியது..
ஓடுனர் கடவுளாக..!நான் பக்தனாக..!
இன்று முதல் இப்பேருந்துதாமதமாகவே வர வேண்டும் என்பது என் வேண்டுதலாக..!

யார் இவள்??
விண்ணிலிருந்து விழுந்த நட்ச்சத்திரமோ??
அல்ல நிலவின் ஒரு துண்டோ??
தெரியவில்லை..
ஒன்று மட்டும் விளங்கியது..
இவள் பிரம்மனை ஏழையாக்கி பிறந்திருக்கிறாள்..

அவளென்னும் நிலவில் குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்..
அவள் சிரித்தாள்..
என் இதயம் சிதறியது..
சிதறிய துண்டுகளை சேகரிப்பதற்க்குள்என் உயிரைப் பிரியும் தருணம் வந்து விட்டது..
ஆம்..
நான் ஏற வேண்டிய பேருந்து கண்ணில் பட்டது..

[தொடரும்..]

3.
கணப் பொழுதில் என் காதலை
என் இதயத்திலிருந்து வேரோடு
பிடுங்கி விட்டதாய் ஒரு எண்ணம்..!!
அட!! எப்போது என் இதயத்தில்
"காதல்" என்னும் வார்த்தை வேரிட்டது??
ஓ..!!இது தான் கண்டதும் காதலோ?

பண்டமாற்று முறை நடந்து
கொண்டிருக்கையில் இடையூரு செய்தான் கண்டக்டர்
"வேகமாய் இறங்குங்கள்" என குரல் எழுப்பி..
ஆம்..பண்டமாற்று முறையே!!
என் இதயத்தை கொடுத்து விட்டேன்..
அவள் காதலை மாற்றாய் பெற காத்திருகின்றேன்..

சற்றும் சலனமில்லாமல்
என்னைக் கடந்து சென்றாள்..!
நீ கடக்கையில் உன் அழகு
என்னை வீழ்த்திவிட்டதாய்
கேலி செய்வதைப் போல் தோன்றியது..!

பூக்கள் மொத்தமும்
ஊர்வலம் போவதை இன்று தான் கண்டேன்..


நான் மீண்டும் மீண்டும் வீழ்வதில்
ஆண்டவனுக்கும் விருப்பம் போலும்..!
ஆம் அவளும் என் பேருந்து ஏறினாள்..


4.

வீழ்வதிலும் இன்பம் தான்..!
வீழ்வது உன் அழகில் தானே..
என்ன காயங்கள் மட்டும் என் இதய்த்திற்க்கு..

அவள் இசைத்த முதல் இசை
"இந்த பஸ் பீச் ரோடு போகுமா?"
அது தான் என் காதில் அன்று ஒலித்த கடைசி ஒலி!!


வேடந்தாங்கல் விருந்தாளி, ஊர்
செல்வதைப் போல் இறங்கிச்
சென்றது என் பறவை
அவள் நிறுத்தம் வந்ததும்..!!

அன்று என் பணிமுடித்து
திரும்புகையில் ரசித்தேன்..
தேன் உறிஞ்சும் பூக்களை!!
மழலையின் சிரிப்பை!!
தென்றலை!!
இசையை!!
குழாய் அடி சண்டையும்
குழல் ஊதுவதாய் ஒலித்தது என் காதில்!!

இத்தனை நாள் எங்கிருந்தீர்கள்??
கேட்டது மனம்..!!
இவைகள் காதலியோடு வந்த
இலவச இணைப்பா??
அவைகள் சொன்னது
"வாழ்வை ரசிக்க தெரிந்தவனுக்கு
கயிற்றுக் கட்டிலும் பஞ்சு மெத்தையே..
ஒரு செம்பு கூழும் கோழி குழம்பே..
இன்று தான் நீ ரசிக்க தொடங்கியிருக்கிறாய்.."
ஆக என்னை ரசிக்க வைத்தவளும் அவள் தானோ??

இது காதலா??இல்லை காமமா??
காமம் என்றால் என் கண்கள் அவளை கற்பப்ழிப்பு தானே செய்திருக்கும்??
ஆனால் இல்லையேநான் அவளை தரிசிக்கத் தானே செய்தேன்??
[தொடரும்]

5.

இரவில்..
இரயில் பயணத்தில் பின்னோக்கி
செல்லும் மரங்களைப் போல
பின்னோக்கி பயணம் செய்து
கொண்டிருந்தேன் காலப் பயணத்தில்
அவள் கண்களை மீண்டும் காண..

உன்னிடம் கேட்கவில்லை
நீ என்னிடம் களவாண்ட
நிமிடங்களை திருப்பி தா??என
மீண்டும் எப்போது களவாடுவாய்?? எனவே கேட்கின்றேன்..

மறுநாள்..
காதல் தேவன் உரசிச்
சென்றதில் கவிதையும் பிறந்தது..
"வலப் புள்ளி நான்..
இடப் புள்ளி நீ..
காதல் என்னும் மூன்றாம் புள்ளியில்
முழுமையடைந்தது நம் எழுத்து..
இது ஆய்த எழுத்து அல்ல..
நம் உயிர் எழுதிய உயிர் எழுத்து..

"தேவதை ரதத்தில்
ஊர்வலம் செய்வதை
காணக் காத்திருக்கும் பக்தனை போலவே
தினமும் நம் பூலோக சொர்கத்தை வந்தடைகிறேன் வேகமாய்..

இப்படியே தினமும் பூக்கின்றேன்..
என்றோ ஒரு நாள்
நீ தேன் உறிஞ்ச வருவாய் என..
கொடுத்து வாழ்வதில் இன்பம் தான்
என்னும் தத்துவத்தில் சங்கமிக்க..

இதயத்தின் கனம்கூடி விட்டது..
உன்னுடய காதலையும்
சேர்த்து சுமக்கிறேன் அல்லவா??

6.

என் நாட்காட்டியில் மொத்தம்
261 நாட்காளே..
சனியும்,ஞாயிறும் நாடு கடத்தப்பட்டனர்
என் நாட்காட்டியில்..

என்னுடன் வா..
இருவரும் சேர்ந்து ஒரு ஆயுளை பகிர்வோம்..

சூரியன்க்கும்,சந்திரனுக்கும் இடையில்
ஊஞ்சல் கட்டி
உல்லசமாய் கழிப்போம் நம் பொழுதை..

ஒரே கோப்பையில்
தேனீர் அருந்துவோம்..
ஒரு வாய் நீ..
ஒரு வாய் நான்..
இருவரது எச்சிலும் கலக்கட்டும்..
அளவுக்கு மிஞ்சி அமிர்தம் உண்டு
காதல் கடலில் மூழ்கி இறப்போம்..

அடை காப்பேன் உன்னை..
நிலாச் சோறு ஊட்டுவேன்..
நீ சினுங்குகையில் முத்தங்கள் கொடுப்பேன் லஞ்சமாய்..
உன் தாயிர்க்குப் பிறகு
மீண்டும் உன்னை சுமக்க விரும்புகிறேன் ஒரு தாயாக..

என் பாதையில்
மைல் கல் அல்ல நீ..
நான் செல்லும் பாதை நீ..

அனைத்தையும் சொல்ல நினைக்கிறது மனம்..
ஆனால் உன்னைக் காண்கையில்
சொற்கள் அனைத்தும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் ஒளிந்து கொள்கிறது..
என்னையும் கொல்கிறது..

இப்போதைக்கு என் கண்கள் மட்டுமே என் மொழியாய்..
நாளை கண்டிப்பாய் உன்னிடம் பேசி விடுவேன் என்பது என் நம்பிக்கையாய்..

கனவு

கனவு::::

நிழல்களை
நிஜமாய் காண
நிஜத்தில்
தோன்றும்
நிழல்..

அவளின் அழகு

பிரம்மனை கடனாளி ஆகி விட்டாயமே?உண்மையா?

நிலவின் வெண்மை கொண்டு உனக்கு வண்ணம் பூசினாயமே??
அட அது தான் நிலவின் ஒரு பகுதி வெண்மை குறைந்து உள்ளதோ?

பஞ்சு மெத்தை மேகம் கொண்டு உந்தன் தேகம் செய்தானாமே??
அட அது தான் வானத்தில் மேகத்தின் பற்றாகுறையோ??

இரவு நேரத்தின் வானத்தை இரு உருலை ஆக்கி உந்தன் கண்களில் வைத்தானமே??
அட அதனால் தான் இப்பொழுதெல்லாம் அந்தி சாய்வதில்லையோ??

அந்த நட்சத்திரம் பறித்து உந்தன் கண்ணங்களில் பருக்கள் செய்தானாமே??
அட அதனால் தான் எவற்றையும் இப்போது வானத்தில் காண முடிவது இல்லையோ??

அமிர்தம் கொண்டு உந்தன் இதழ்களை செய்தானமே??
அட அதனால் தான் தேவலோகத்தில் தேவர்களுக்கு உணவு பற்றாகுறையோ??

இவர்க்ளுக்கெல்லாம் கடனை எப்படி தீர்க்க போகின்றேன் என்று
பிரம்மன் என்னிடம் தினமும் புலம்புகிறான்..

எல்லோரும் காதலியுங்கள்....

எல்லோரும் காதலியுங்கள்....

அவன் வீட்டுக் குழாயில் ஏற்ப்பட்ட விரிசலில் வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

அவன் பல் துலக்கும் போது வழிந்தோடி வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...அ

வன் முக சவரம் செய்யும் போது கசிந்தோடும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

பாதி குடித்த தண்ணீர் பாக்கெட்டை விசி எறிவதில் வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

அவன் வீட்டுப் பக்கத்தில் கழிவு நீர் குடி நீரில் கலந்து வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...

ஆனால் அவன் காதலியின் ஒரு துளி வியர்வை பூமியில் விழுந்தது
என
கண்ணீர் வடிக்கின்றான்...

எல்லோரும் காதலியுங்கள்....
காதலியின் வியர்வைத் துளிகளை சேமித்தாவது
தமிழ்நாட்டின் தண்ணிர் பஞ்சத்தை தீர்ப்போம்..

என்னவள்

காற்று அடித்ததால் கொடி அசைந்த்தா
அல்ல கொடி அசைந்த்தால் காற்று அடித்ததா??

இவை பழையவை..
இதோ சொல்கிறேன் என் புதியவைகளை..

உன்னைப் பற்றி எழுதியதால் கவிதை அழகானதா
அல்ல உன் ஆழகை பற்றி எழுதியதால் அவை கவிதை ஆனதா?

அழகென்றால் உந்தன் பெண்மையா
அல்ல பெண்மையில் பிறந்த அழகா நீ??

நிலவில் இருந்து உனக்கு வண்ணம் பூசினரா
அல்ல உன்னில் இருந்து நிலவிற்க்கு வண்ணம் பூசினரா??

உன்னை கண்டதால் சூரியன் உதிக்கிறதா
அல்ல சூரியன் உதிப்பது உன்னைக் காணவா??

நீ உன் தாயின் முழூ உருவமா
அல்ல உன் மகளின் மாதிரி உருவமா??

உன்னை கண்டதும் காதல் பிறந்ததா
அல்ல உன்னை காதலிக்க கண்டதும் மீண்டும் பிறந்தேனா??

கவிதையைப் பற்றி கவிதை

கவிதை என்பது

என்
கண்ணீர்,கவலை
மகிழ்ச்சி,பாசம்,
நேசம்,பரிவு,
பிரிவு,நட்பு,
காதல்,ரசனை,
கற்பனை,வேதனை,
துன்பம்,இன்பம்..

என எல்லாவற்றையும்
என் தனிமையில்
புதைக்க
அரிதாரம் பூசிகொண்ட
சவப்பெட்டி..

காதல் கவிதை

தேவலோகத்தில்
ஒரே சலசலப்பாம்..

கம்பனும்
பாரதியும்
பாரதிதாசனும்வ
ள்ளுவனும்

மீண்டும் பிறக்க வேண்டுமாம்
உன்னைப் பற்றி கவி எழுத..

ஜாதி

மனிதனின் பரிணாம வளர்ச்சியின்
முதல் பரிணாம வீழ்ச்சி ஜாதி..

தேன் குடிக்கும் தேனீக்கள் பார்ப்பதில்லை
பூக்கள் என்ன ஜாதி என்று..

ஒளி கொடுக்கும் சூரியன் பார்ப்பதில்லை
ஜீவராசிகள் என்ன ஜாதி என்று..

பால் வண்ண ஒளிவீசும் சந்திரன் பார்ப்பதில்லை
உயிர்கள் என்ன ஜாதி என்று..

எங்கேயும் கேட்டதுண்டா
முதலியார்களுக்கு ஒரு கை ஒரு கால்
மட்டுமே படைக்கப்படுமென??
மனிதனைப் படைக்கும் இறைவனே பார்ப்பதில்லை
மனிதன் என்ன ஜாதி என்று..

இவை மனிதனுக்கு மனிதனே இட்டக் கோடுகள்..
இக்கோடுகள் உள்ள வரை ஜாதிகள் இருக்கும்..
ஜாதிகள் இருக்கும் வரை வன்முறை நிலைக்கும்..
வன்முறை நிலைக்கும் வரை மனிதம் பிறக்காது..
மனிதம் பிறக்கும் போது மனிதன் இருக்க மாட்டான்..

அப்போது உறக்கச் சொல்லுங்கள் நீங்கள் எந்த ஜாதி என்று..
கேட்க வெறும் வெற்று பூமி மட்டுமே இருக்கும்..

முடிவு தெரிய வேண்டும்

முடிவு தெரிய வேண்டும்..

வருடம் ஆறு..!
இன்னும் உன் நிழலை பின் தொடர்கிறதுஎன் கால்கள்..!
என்ன??
இன்னும் எனக்குமதிபெண் இடுகிறயா??
வேகமடி பெண்ணே..!
முடிவு தெரியும் முன் இந்தவிடைத் தாள் எரிந்து விட போகிறது..!
இறந்த பின் தான் நரகம் என எவன் சொன்னது?
முட்டாள் அவன் காதலிதிருக்க மாட்டான்..
எனக்குள் ஏனோ பயம்..!
எங்கே உன் நிழலை தேடி
என் நிஜத்தை இழந்கு விடுவேனோ என்று!!

ஒரு பெண்ணின் காதல் தோல்வி

காதலி..
ஒவ்வொரு ஆணின் இரன்டாம் தாய்..
இது ஷேக்ஸ்பியர் கூற்று..
ஆம் நீ உன் இரண்டாம் தாயை இழந்து விட்டாய்..

நீ கொடுத்த முத்தங்கள் மட்டும்
என் இதயத்தில் வடுக்களாய் மாறி நிற்க்கின்றது..

கேட்கும்போதெல்லாம் முட்கள் இல்லா
ரோஜா தந்தாய்..
இன்று என் கையில் உன் மணப்பத்திரிக்கை..எ
ன் கண்களில் கண்ணீர்..
என்ன??
கொடுக்க மறந்த முட்களைக்கொண்டு
இந்த மணப்பத்திரிக்கை செய்தாயா??
ரணமாய்க் கொல்கிறதே??

நேற்று
என்னைநிலா என்றாய்..
நட்சத்திரம் என்றாய்..
மேகம் என்றாய்..
என்ன??
உணர்ச்சி அற்ற பொருட்கள் உன்னிடம் வழக்கிட
வராது எனும் நம்பிக்கையில் கூறினாயா??
இன்று என்னை
உன் பழைய காதலி என்றாய்..
நானும் உணர்ச்சி அற்ற பொருளாகவே நிற்க்கின்றேன்..

நான் கல்லறை கட்டப் போவதில்லை என் காதலுக்கு..
கோவில் எழுப்புகிறேன்..
முடிந்தால் வழிபட்டு செல்..
என்னை அல்ல என் உண்மைக் காதலை..

சிசுக் கொலை

சிசுக் கொலை..
நான் என்ன தவறு செய்தேன்??

லஞ்சத்தில் கொழுத்த புழுக்களும்
வஞ்சகத்தில் வாழும் வண்டுகளும்
வாழும் இவ்வுலகில்
இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??

நான் என்ன தவறு செய்தேன்??
கல்வியை விற்க்கும் மூடர்களும்
கலாச்சாரத்தை தொலைக்கும் பொறுப்பற்றோறும்
வாழும் இவ்வுலகில் இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??

நான் என்ன தவறு செய்தேன்??

உடலை விற்க்கும் விலை மாதர்களும்
பணத்திற்க்காக மனசாட்சியை தொலைக்கும் மனிதர்களும்
வாழும் இவ்வுலகில் இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??

விடை கிடைக்கவில்லை இவைகளுக்கு...
ஒன்று மட்டும் விளங்கிவிட்டது..
இவர்களுடைய பாதங்களுடன் என் பாதங்களும்
நடை போட வேண்டுமா??
வேண்டாம்..
நான் தவறு செய்தவனாகவே இருந்து விடுகிறேன் தாயே..
நான் தவறு செய்தவனாகவே இருந்து விடுகிறேன் ..

அனாதை

என் தாயின்
பத்து மாத துயரத்தையும்..
பிரசவ வேதனையையும்..
என் அழுகையால் கரைத்தவன் நான்..
நான் எழுப்பிய முதல் ஒலியில்
என்னைப் பெற்ற பெண்ணை
முழுமையடைய செய்தவன் நான்..
பெண்ணென்று பிறந்தவளை
தாய் என பெயரிட்டேன்என் பிறப்பால்..
ஆனால் அவளால் எனக்கு கிடைத்த பெயர் அனாதை..

கண்கள்

கண்கள்:

நீ
வெள்ளை வான் வெளியில்
ஒரு கருப்பு நிலா..

நீ மோசமானவன்..
நீ செய்யும் சித்து விளையாடிற்க்கு,
தண்டனை அனுபவிப்பது இதயம்...

நீ மட்டும் இல்லையென்றால்
காதலுக்கும்,காதலர்களுக்கும்
"இடம் காலி இல்லை" என முடக்கி விடப்பட்டிருப்பார்கள்..

நீ வேகமாக பயிலும் மாணவன்..
காதலர்களிடம் இருக்கும்போது மட்டும்
எப்படி குறுகிய காலத்தில் நடனம் கற்றுக்கொள்கிறாய்??
ஓரக் கண்களால் பார்ப்பதும்.
.கண்களில் ஜாடை சொல்வதும்..
உதடுகள் பேச மறுக்கும் போது நீ பேசும் பாஷையும்..
அப்பப்பா..
காதல் என்னும் ஆட்சியில்
நீ தான் ஆட்சி மொழி என
அறிவிக்கப் படாதது மட்டுமே குறை..

நீயும்,வானமும் ஒன்று தான்..
கருமேகங்கள் ஒன்று சூழ மழை..
இதயத்தின் ரணங்கள் ஒன்று சூழ கண்ணீர்..

உன்னிடம் சில கேள்விகள்..??

கேள்வி:
ஒரு துளி கண்ணீரில் எத்தனை அளவு சோகத்தை வெளியேற்றுகிறாய்??

பதில்:
ஒரு பிடி சர்க்கரையில் எத்தனை இனிமை உள்ளது என அளவிட முடியுமா உன்னால்??உணரத் தானே முடியும்??அது போலவே கண்ணீரும்..
வெளியேறும் காயத்தின் அளவை உணரத்தான் முடியும்..

கேள்வி:
உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் உன்னால் கண்ணீரில் வெளியேற்றி விட முடியுமா??

பதில்:
உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம்கண்ணீரில் வெளியேற்றியிருந்தால் என்றோ உலகம் கண்ணீரில் கரைந்து அழிந்திருக்கும்..

மலடியின் குழந்தை

மலடியின் குழந்தை:

என் அன்பு மகனுக்கு..

நித்தம் நித்தம்
நித்திரை தொலைத்து
நித்தமும் உனை நினைத்திருக்கும்
நிம்மதி அற்ற தாய் எழுதுவது..

எப்போது வருவாய் நீ??

உன்னை "சுமக்க" வேண்டும் என வர மறுக்கிறாயா??
நான் உன் "சுமை" தாங்கி அல்லடா
நான் உன் "சுகம்" தாங்கி..

தட்டச்சிலும்,கரண்டியிலும் தேய்ந்த
இவ்ரேகைகள்
உந்தன் பஞ்சனை தேகத்திலும்
கொஞ்சம் தேயட்டுமே..

இந்த பூமியில்(கருவறை) பிறக்க
உனக்கு வளம் போதவில்லையா??
காய்ந்த நிலத்திலும்
கள்ளிச்செடி வளர்கிறதே??

நீ வரும் வரை
என் கருவறையும் என்க்கு கல்லறையே..
வருகை தா..
என் கருவறைக்கு ஒரு முகவரி தா..
பால் பொங்க(வாந்தி)வரவேற்கிறேன் உன் புது அறைக்கு..

நீ என் கண்ணில் உள்ள கருவிழி..
நீ இல்லாமல் என் கண்களுக்கு அழகேது??
என் கருவறையும் இப்போது அப்படியே??

உன் பிஞ்சு சினுங்கல் வேண்டும்..
நீ முட்டி மோதி பால் உண்ணும் சுகம் வேண்டும்.
.இரவெல்லாம் விழித்து காக்கும் அந்த சுகதுன்பம் வேண்டும்..
உந்தன் மழலைக் கதறல் வேண்டும்..

அடுத்த கடிதம் உன் புது அறையில் வந்து பெற்றுக்கொள்..

இப்படிக்கு..
உன் வருகைக்கு காத்திருக்கும்..
மலடித்தாய்..