Friday, November 2, 2007

நட்பு

இல்லங்களின் விதிகளுக்கும்,
வினாகளுக்கும் அடங்கியதல்ல
நம் நட்பு..

காதல் கொடுத்த கண்ணீரை
உன் தோள்களில் துடைத்தேன்..

விதி எழுதிய தீர்ப்புகளில்
நாமும் தண்டிக்கப்பட்டோம்..

ஆம் இது பிரியும் தருவாய்..
சொந்த பந்தமெல்லாம் ஏலன பார்வை பார்க்க,
தோள் தட்டி துணை நின்றாய்..
அவர் தன் பொறாமை பார்வையின் இடையில்,
என் வெற்றிக்கண்டு
எட்டி நின்று புன்னகை பூத்தாய்..

பணம் பார்த்து வந்த பந்தம் ஆயிரம் வேண்டாமடா
என் மனம் பார்த்து வந்த உன் ஒரு சொந்தம் போதுமடா..

உயிர் கொடுப்பன் தோழன் என்பது வேண்டுமெனின் பொய்யாய் தோன்றலாம் சிலருக்கு..
உண்மையான மனம் கொடுப்பான் தோழன் என்பது நிச்சயம் உண்மை..
இன்றைய போட்டியும்,பொறாமையும் நிறைந்த இவ்வுலகில்
அவை கிடைப்பதே அரிது..

நம் நட்பிற்க்கும் கற்புண்டு..
ஆயிரம் ஆராவரத்திற்க்கும்,மகிழ்சிக்கும் மத்தியில்
என்னால் உன் பாதையும்
உன்னால் என் பாதையும்
மாறாமல் பார்த்துகொள்வோம்..

ஆயிரம் அலுவலுக்கு மத்தியில்,
ஒரு நிமிடம்,
ஜன்னல் வழியே அண்னாந்து பார்க்கும் என் பார்வை,
அப்போது கடந்து செல்லும் மேகங்களோடு
உன் நினைவுகளும் கடந்து போகும்..
அந்த ஒரு நிமிடம் போதும்
நம் நட்போடு நடை போட..

கிளையில்லா மரமொன்றும்
நிழழொன்று கொடுக்காது..
நல்மனமில்லா நட்பென்றும்
நெடுந்தூரம் நிலைக்காது..

காதலில் மட்டுமே வலி என்று சொன்னவன் காதில்
உரக்கச் சொல்,
நட்பிலும் காதல் உண்டு,
பிரிவிலும் வலி உண்டு என்று..

காதல் விளையாட்டு

என் நேர் விழி பார்வையும்
உன் ஓர விழி பார்வையும்
இணைந்த அந்த பாதையில்
நம் காதல் பயணம் தொடங்கியதே!!

உன்னால்,
கவிதையும்
காதலும்
இன்று கட்டித் தழுவியதே!!

உன்னை நினைத்து கரைத்த
நிமிடங்களை நினைத்து
கரைந்தே போகிறேன்..

சத்தமின்றி நுழைந்தாய்..
சலனமின்றி சாகிறேன்..

என் எழுதுகோலுக்கும்
காதலிக்க கற்றுக் கொடுத்துச் சென்றாய்..

காதல் தேவனின் மடியில் சாய்வதாய் நினைத்து,
மரண தேவனின் மடியில் மடிகிறேன்..

உன் விரல் பிடித்து நடக்க ஆசை இல்லை எனக்கு,
உன் விழி பிடித்து நடக்கவே பிரியப்படுகிறேன்..

படிக்க அமர்ந்தபோது,
என் சிந்தை எல்லம் சிதறிப்போக
சிதறிய பாகங்களில் எல்லாம் உன் முகம்..

கவிதை எல்லாம் கை வந்த கலை,
உன்னை காணும் முன்..
இப்போதெல்லாம் வார்த்தைகளும் என்னுடன்
வம்பிழுக்கின்றன,உனக்காய் மட்டுமே கவிதை எழுதிகிறேன் என்று..

நேரம் போவது அறியாது
வரம்பு மீறி நிற்கிறது என் பார்வை,
உன் அழகு முகத்தின் மீதே
உன் தந்தை அருகில் இருக்கிறார்
என்பதை கூட அறியாமல்..

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்தே
ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கிறேன்
இதுதன் காதல் ஆடும் ஆட்டமோ..??