Saturday, April 14, 2007

கல்லூரி நாட்கள்..

கல்லூரி நாட்கள்..
இலைகளாய் நுழைந்தோம்!!
மரங்களாய் நிற்கின்றோம்!!
வேர்களாய் நம் நட்பு!!
நாட்காட்டியில் தேடி கொண்டிருக்கிறேன்
நாம் சிரிக்க மறந்த நாட்களை,
அட என்ன விந்தை
நான்கு ஆண்டுகளாய் அதற்கு விடுமுறை!!
கல்லூரி அத்தியாயத்தில்
முற்று புள்ளி வைக்கும் அந்த கடைசி தினத்தில்
கண்ணீரை கொண்டு அதை தொடர் கதை ஆக்க முயன்று
தோற்றுப் போனேன்..
அவர்கள் தந்த பாடம் எல்லாம் படித்தே முடித்தோம்
மதிப்பெண் பெற்றோம்!!
இலவச இணைப்பாய் மனித மனங்களையும் படித்தோம்
நண்பர்கள் பெற்றோம்!!
சில மனங்களை படிக்க முயன்று தோற்றோம்!!
இன்றோ அத்தோல்விகளை நினைத்து சிரிக்கும் தருணம்!!
அந்த நாட்களில்
படித்து
படித்து
களைத்த கண்களுக்கு
அப்பகுவமற்ற காதலால் கிடைத்த
அவள் முகமும்
அவள் மறந்து விட்டு போன கைக்குட்டையுமே ஆறுதல்!!
அந்த நாட்களில்
எல்லாமே என்னிடம் என்னும் ஓர் எண்ணம் ..
கல்லூரி முடித்து திரும்பி பார்த்தேன்,
ஆள் இல்லா வீதியில் நான் மட்டுமே என்னும் ஓர் எண்ணம் ..
தேனீக்களுக்கு சவால் விடும் பருவம் அது!!
என்ன ..
தேன் உரிஞ்ச மட்டும் பக்கத்து வகுப்பறைக்கு செல்வோம்!!
கவிதை எழுதப்பட்ட மேசைகளுக்கும்..
நய்யான்டி கதைகள் எழுதப்பட்ட சுவர்களுக்கும்..
வண்ணம் தீட்டி மறைத்து விட முடியும்..
இதயத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை மறைக்க ஏது வண்ணம்??

அவள் உறங்குகிறாள்.....

நிலவு சாய்ந்தது..

ஒரு நாள் உற்சாகம்
முற்று பெற்று
"அசதியாய் இருக்கிறது டா " என
வெள்ளி தாமரை மெத்தை சாய,

உதட்டோரம் எறும்பு ஊர
சக்கரை கட்டி சுமந்து சென்றதை கண்டேன் அடி !!
ரணத்தில் நீ சிணுங்க
என் இதழ்கள் ரெண்டும் உனக்கு
பச்சை வைத்தியம் செய்தேனடி !!

ரோட்டோர கொசுக்கள் எல்லாம்
தேனீக்களாய் மாறியதேன்..??
உந்தன் தேன் குடிக்க வந்த போது
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்..

கண்மணி நீ உறங்க
பகலிலும் நிலவொன்றை
வாடகைக்கு எடுப்பேன்!!

குளிரும் உனை மெல்ல தீண்ட
கங்காரு போலே அடை காப்பேன் !!

கடவுள் கண் முன் தோன்ற
வரம் ஒன்று கேட்பேன் ,
உன் முகம் ஒன்று காண
சிலை ஆக்கி விடு என்று!!

சிறந்த பூக்கள் எல்லாம் தேர்ந்தெடுத்து
இதழ்கள் எல்லாம் சேர்த்து தைய்து
மெத்தை ஒன்று நான் செய்வேன்
வெண் மேகம் நீ தூங்க!!

சூரியன் உதிக்க தலை எடுக்க
அதன் தலையில் ஓர்
தட்டு தட்டி நான் அமர்வேன் !!

விண்ணில் பறக்க சிறகை விரிக்கும் பட்சிகளுக்கெல்லாம்
விடுமுறை கொடுத்து கூட்டில் அடைப்பேன்!!

வேதனை அற்ற முத்தம் ஒன்றை
நெற்றிப்பொட்டில் நான் குடுக்க
கண்விழித்து நீ பார்க்க
"இன்னும் நீ தூங்கலயா டா "என கேட்க
மீண்டும் ஒரு தாய் மடி வேண்டும் என உன் மடி சாய்வேன்!!