Friday, March 5, 2010

To My Friend..2010

என் தோழிக்குப் பிறந்தநாள்..

என் ஆறாண்டுகால நட்பின் அடையாளம் இவள்..

இவளுக்காய் என்ன கொடுக்க?புத்தகம்?அவளுக்கு ஆர்வம் இல்லை அதில்..

கட்டி தழுவ ஒர் கரடி பொம்மை??இல்லை வேண்டாம்..

சரி இந்த அவசர யுகத்தில் அவளிடம் எப்படி இதை சேர்ப்பது..?

உடைந்தது இந்த முயற்சிகள்..


அடுத்து என்ன என நான் இருந்தேன்..

Happy birthday..

Many more happy returns of the day..

Birthday Wishes..

என வழக்கமான வாழ்துக்களோடு அகப்பட விரும்பவில்லை என் சொற்களும் என் வாழ்த்தும்..


ஆறுதல் கூற அருகில் அமரந்தது தமிழ் வார்தைகள்..
என் காகித மடலை அலங்கரிக்க ஆயத்தமாகிறது என் தமிழ்..

அவள் காதுகளை முத்தமிட தொடங்குகிறது அதன் பயணத்தை..


இன்று Mar 4..

இறைவன் வரைந்து வைத்த ஓவியத்திற்க்கு

உயிர் கொடுத்த தினம்..

உன் பிஞ்சு கதறல் இப்பூமியை

தொட்ட தினம்..

வாழ்வென்னும் நாடக மேடையில்,

அரிதாரம் பூசி நடிக்க தொங்கிய தினம்..

என் உணர்வுகளை மதிக்கும்

மற்றும் ஒர் உயிர் பிறந்த தினம்..

என் வார்தைகளை கேட்க்கும் செவிகளுக்கு ஒர் வயது மூப்பு..

என் புன்னகையை பகிர்ந்து எடுக்கும் உரிமை பெற்றவளின் பிறந்த நாள்..


இத்தனை ஆன்டுகளில் நீ,

கண்ணீரில் கரைந்தாய்..

புன்னகையில் மலர்ந்தாய்..

முட்களை முத்தமிட்டாய்..

மலர்களில் வாசம் செய்தாய்..

இனி போர் முனையில் நாம்..

போர் வாளை தீட்டிக்கொள்..

போர் தந்திரங்களை மறாவதே..

புன்னகையோடு போரிடு..

புதிதாய் பிறப்போம் தினமும்..

அடித்தல் திருத்தலுடன் எழுதிய

நாட்களை மாற்றி எழுது..

இனி தினம்,

ஒரு கவிதையாய் பிறந்து விடு..

ஒரு புன்னைகையேனும் விலைக்கு வாங்கு..

கவலைகளை கண்ணியமாய் கடத்தி விடு..

உறவுகளுக்கு உயிர் கொடு..

உயிர்களுக்கு உதவி கொடு..

உன் தோட்டத்தில் பூக்கும்

ஒவ்வொரு பூக்களையும் ரசனையோடு சூடிக்கொள்..

(Meant to say about each day in your life)

ஒய்ந்து உதிரும் பூக்களின் கதைகளை கேட்க

என்றும் ஆவலாய் காத்திருக்கும் உன் நண்பன்..


(From Previous year :) )

இன்றோடு ஓர் ஆண்டில்,

வாழ்வோடு போராடி,எவ்வாறு சிதறி போவோம் என அறியாத போதும்,

இனி உரிமையோடு வாழ்த்து சொல்ல,

இனியொரு ஆண்டும் கிடைக்கும் என உறுதி இல்லை..

காலத்தோடு சுழன்று மீண்டும் நாம் சந்திப்போம் ஆயின்

அடுத்த ஆண்டும் உறிதியாய் வருவோம் நானும் என் கிறுக்கல்களும்..