எல்லோரும் காதலியுங்கள்....
அவன் வீட்டுக் குழாயில் ஏற்ப்பட்ட விரிசலில் வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...
அவன் பல் துலக்கும் போது வழிந்தோடி வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...அ
வன் முக சவரம் செய்யும் போது கசிந்தோடும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...
பாதி குடித்த தண்ணீர் பாக்கெட்டை விசி எறிவதில் வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...
அவன் வீட்டுப் பக்கத்தில் கழிவு நீர் குடி நீரில் கலந்து வீணாகும்
தண்ணீரைப் பற்றி கவலைப்பட்டதில்லை...
ஆனால் அவன் காதலியின் ஒரு துளி வியர்வை பூமியில் விழுந்தது
என
கண்ணீர் வடிக்கின்றான்...
எல்லோரும் காதலியுங்கள்....
காதலியின் வியர்வைத் துளிகளை சேமித்தாவது
தமிழ்நாட்டின் தண்ணிர் பஞ்சத்தை தீர்ப்போம்..
No comments:
Post a Comment