சிசுக் கொலை..
நான் என்ன தவறு செய்தேன்??
லஞ்சத்தில் கொழுத்த புழுக்களும்
வஞ்சகத்தில் வாழும் வண்டுகளும்
வாழும் இவ்வுலகில்
இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??
நான் என்ன தவறு செய்தேன்??
கல்வியை விற்க்கும் மூடர்களும்
கலாச்சாரத்தை தொலைக்கும் பொறுப்பற்றோறும்
வாழும் இவ்வுலகில் இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??
நான் என்ன தவறு செய்தேன்??
உடலை விற்க்கும் விலை மாதர்களும்
பணத்திற்க்காக மனசாட்சியை தொலைக்கும் மனிதர்களும்
வாழும் இவ்வுலகில் இப்பிஞ்சு பாதஙள் பட அனுமதி இல்லையா??
விடை கிடைக்கவில்லை இவைகளுக்கு...
ஒன்று மட்டும் விளங்கிவிட்டது..
இவர்களுடைய பாதங்களுடன் என் பாதங்களும்
நடை போட வேண்டுமா??
வேண்டாம்..
நான் தவறு செய்தவனாகவே இருந்து விடுகிறேன் தாயே..
நான் தவறு செய்தவனாகவே இருந்து விடுகிறேன் ..
No comments:
Post a Comment