என் தாயின்
பத்து மாத துயரத்தையும்..
பிரசவ வேதனையையும்..
என் அழுகையால் கரைத்தவன் நான்..
நான் எழுப்பிய முதல் ஒலியில்
என்னைப் பெற்ற பெண்ணை
முழுமையடைய செய்தவன் நான்..
பெண்ணென்று பிறந்தவளை
தாய் என பெயரிட்டேன்என் பிறப்பால்..
ஆனால் அவளால் எனக்கு கிடைத்த பெயர் அனாதை..
No comments:
Post a Comment