Thursday, August 19, 2010

திமிர் பிடித்தவள்.. 1

வர வர உடம்பு ரொம்ப மோசமாகிகிட்டே போகுது..
ஏன் என்ன ஆச்சு என என் விரல் பற்றி வினவினாள்..?
உன் பார்வைக்குள் சிறைபடுவதை
வாடிக்கையாய் கொண்டுவிட்ட தசைகளை
வேறு என்னவென்று சொல்வது??என முடித்தவுடன்,
எங்களிடையில் சிறிது இடைவெளி மிச்சம் இருந்தது..

நான் அள்ளி அணைக்க,
அவள் விலகி ஓட,
ஏய் திமிர் பிடித்தவளே நில் என்றேன்..
கேள்விகளோடு எனைப் பார்த்த அவளிடம்,
தினமும் திமிறும் அழகை ஆடைக்குள் அடைப்பவளை
வேறு என்னவென்று அழைப்பது என முடித்த கணத்தில்,
அவளது மொத்தத் திமிறும் எனை சுற்றிக்கொண்டது..

ஒரு நாள் உன்னிடம்,
இந்த உலகில் உனக்குப் பிடித்த இடம்
என்னவென்று கேட்டேன்..
நீ பதிலேதுமின்றி,
என் தோள் மீது சாய்ந்து எனை அணைத்த பொழுது,
என் காதலின் கணம் கொஞ்சம் கூடிப் போய் விட்டது..

என் ஜலதோஷம் உன்னை
தொற்றிக்கொள்ள வேண்டாமென
தனியே உறங்க முடிவெடுத்தேன்,
உன்னை பிடித்த எல்லாவற்றிற்க்கும் என்னையும் பிடிக்கும்,பிடிக்கட்டும் என
என் தோளில் நீ சாய்ந்த பொழுது,
உனக்கு காதல் தோஷம் பிடித்திருப்பதை உணர்ந்தேன்..

ஏன் இப்படி பார்க்கிறாய்? என்றாய் நீ
இல்லை தன்னை தானே ஆடை என்னும் ஜாடிக்குள்
அடைத்துக் கொள்ளும் அழகென்னும் பூதத்தை இப்போது தன் பார்க்கிறேன் என்றேன்..
போதும் உன் கற்ப்பனைப் பேச்சு..
எங்கே அதனை சத்தங்கள் இன்றி வெளியேற்றிவிடு பார்ப்போம் என நீ வம்பிழுத்தவுடன்,
என் முத்தஙள் உன்னை வெளியேற்ற தாமதிக்கவில்லை..

No comments: