Saturday, September 18, 2010

திமிர் பிடித்தவள்.. 2

ஏய் விடு!!
முடியாது,நான் உனக்கு நகச்சாயம் பூசினால் என்ன?
"அய்யோ விடு,யாரவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்" என்றாய்,
"நிலவிற்க்கு வண்ணம் அடிப்பதாய் நினைப்பார்கள்" என்றதும்
வண்ணம் பூசாமல் சிவந்தது உன் முகமும்..

என்ன டா பண்ற?
உன்னை காதலித்துக் கொண்டிருக்கிறேன்..
உனக்கு வேற என்ன தான் தெரியும்??
உன் மை விழி பார்வையில் தொலைந்து போகத் தெரியும்..
உன் தமிழ் பேசும் அழகிய உதடுகளில் உறங்கிப் போகத் தெரியும்..
உன் அலை அலையான கூந்தலில் மிதந்துப் போகத் தெரியும்...
அப்புறம்?
இப்படி அழகாய் பொய் சொல்லத் தெரியும்..
அடப்பாவி..

கண்டிப்பா வேடந்தாங்கல் போகனுமா என்றேன்..
ஏன் என்ன ஆச்சு?என கலக்கத்துடன் கேட்டாய் நீ..
பிறகு அங்கே வரும் ஆண் பறவைகள் எல்லாம்
உன்னை பார்த்து இது எந்த ஊர் பறவை என ரசிக்கத் தொடங்கிவிட்டால் நான் என்ன செய்வது..??

துணி உலர்த்திக் கொண்டிருந்தாய் நீ..
என்ன அப்படி பார்க்கிறாய் என்றாய்..
இல்லை தேவதைகளெல்லாம் இப்படித் தான்
சாரலை தந்து விட்டு,
வண்ண ஆடைகளை வானவில்லாய் உலர்த்துகின்றதோ என்றேன்..
கொஞ்சம் வானவில்லை வெட்கத்துடன் என் மேல் எறிந்து விட்டுப் போனாய்..


காதலன்:எங்கே போகிறாய்?
காதலி:காக்கய்களுக்கு அன்னம் வைக்க?.
காதலன்:சரி ஜாக்கிரதை
காதலி:ஏன்?..
காதலன்:இல்லை,ஒரு தேவதை நம்மை அழைக்கிறது என்று,
பறவைகளும்,குருவிகளும்,வண்ணத்து பூச்சிகள் எல்லாம் வீடு தேடி வந்து விட போகிறது..
காதலி:போடா..

No comments: