Saturday, March 3, 2007

அவளின் அழகு

பிரம்மனை கடனாளி ஆகி விட்டாயமே?உண்மையா?

நிலவின் வெண்மை கொண்டு உனக்கு வண்ணம் பூசினாயமே??
அட அது தான் நிலவின் ஒரு பகுதி வெண்மை குறைந்து உள்ளதோ?

பஞ்சு மெத்தை மேகம் கொண்டு உந்தன் தேகம் செய்தானாமே??
அட அது தான் வானத்தில் மேகத்தின் பற்றாகுறையோ??

இரவு நேரத்தின் வானத்தை இரு உருலை ஆக்கி உந்தன் கண்களில் வைத்தானமே??
அட அதனால் தான் இப்பொழுதெல்லாம் அந்தி சாய்வதில்லையோ??

அந்த நட்சத்திரம் பறித்து உந்தன் கண்ணங்களில் பருக்கள் செய்தானாமே??
அட அதனால் தான் எவற்றையும் இப்போது வானத்தில் காண முடிவது இல்லையோ??

அமிர்தம் கொண்டு உந்தன் இதழ்களை செய்தானமே??
அட அதனால் தான் தேவலோகத்தில் தேவர்களுக்கு உணவு பற்றாகுறையோ??

இவர்க்ளுக்கெல்லாம் கடனை எப்படி தீர்க்க போகின்றேன் என்று
பிரம்மன் என்னிடம் தினமும் புலம்புகிறான்..

No comments: