Saturday, March 3, 2007

எனக்கு கவிதை எழுதத் தெரியாது

எனக்கு கவிதை எழுதத் தெரியாது..
உலகில் உள்ள
கவிஞர்கள்,
புலவர்கள்
வர்ணிக்காத ஒன்றைப் பற்றி நான் வர்ணிக்கப்போவதில்லை
என் கவிதைக் கொண்டு..
ஆனால்

அவர்கள் வர்ணிக்க தொலைத்த வரிகளை
உன் இதழ்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த தாஜ்மகால் தூண்களை
உன் விரல்களில் கண்டேன்..

அவர்கள் வர்ணிக்க மறந்த இரண்டு கருப்பு நிலாக்களை
உன் கண்களில் கண்டேன்..

கவலைப்படாதே கண்மனியே..
மறுபிறப்பு என இருந்தால்
மீண்டும் பிறப்பேன்..
உன்னைப்பற்றி வர்ணிக்க!!
உன்னைப்பற்றி மட்டும் வர்ணிக்க!!

No comments: