Saturday, March 3, 2007

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

21 ஆன்டுகளூக்கு முன்னால்..
இதே நாளில்
பிஞ்சுக் கதறலுடன் பிறந்தாய் நீ..
யவரையும் தெரியாது அப்போது உனக்கு..

இன்று அதே நாள்..
ஆம் இன்று உனக்குப் பிறந்தநாள்..

இன்றும் நீ ஒரு குழந்தையே..
ஆனால் இன்று நீ..
நிகழ்காலத்தின் மகிழ்ச்சியிலும்..
எதிர்கால்த்தின் ஆர்வத்திலும்..
உன்
தாயின் அரவணைப்பிலும்..த
ந்தையின் கண்டிப்பிலும்..
தம்பியின் சில்மிஷத்திலும்..
பூக்களோடு கடந்து கொண்டிருக்கிறாய் உன் பாதையை..

நானும் உன் பாதையில் ஒரு மைல்க்கல்லே
உன் பாதையில் பூக்கள் மட்டுமே இருக்க வாழ்துக்கிறேன்..
பாதையில் தெளிவு இல்லையென்றால் திரும்பி வராதே..கவலைக்கொள்ளாதே..
நான் மீண்டும் எழுவேன் ஒரு மைல்க் கல்லாக உனக்கு உதவ..

கடலைப் போல் மகிழ்சியும்..
வானம் போல் நிம்மதியும்..
உன் வாழ்வில் கிடைக்க வேண்டுகிறேன்..

கடலும்
காற்றும்
உள்ள வரை
நீ பிறந்த நாள் கொண்டாட வேண்டுமென விரும்புகிறேன்..

உனக்கு இன்று கிடைக்கும்
பூங்கொத்து வாழ்துக்களோடு
இவ்வொற்றை ரோஜா
வாழ்த்தையும் பெற்றுக்கொள்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இப்படிக்குபிரேம் குமார்..