Saturday, March 3, 2007

ஒரு பெண்ணின் காதல் தோல்வி

காதலி..
ஒவ்வொரு ஆணின் இரன்டாம் தாய்..
இது ஷேக்ஸ்பியர் கூற்று..
ஆம் நீ உன் இரண்டாம் தாயை இழந்து விட்டாய்..

நீ கொடுத்த முத்தங்கள் மட்டும்
என் இதயத்தில் வடுக்களாய் மாறி நிற்க்கின்றது..

கேட்கும்போதெல்லாம் முட்கள் இல்லா
ரோஜா தந்தாய்..
இன்று என் கையில் உன் மணப்பத்திரிக்கை..எ
ன் கண்களில் கண்ணீர்..
என்ன??
கொடுக்க மறந்த முட்களைக்கொண்டு
இந்த மணப்பத்திரிக்கை செய்தாயா??
ரணமாய்க் கொல்கிறதே??

நேற்று
என்னைநிலா என்றாய்..
நட்சத்திரம் என்றாய்..
மேகம் என்றாய்..
என்ன??
உணர்ச்சி அற்ற பொருட்கள் உன்னிடம் வழக்கிட
வராது எனும் நம்பிக்கையில் கூறினாயா??
இன்று என்னை
உன் பழைய காதலி என்றாய்..
நானும் உணர்ச்சி அற்ற பொருளாகவே நிற்க்கின்றேன்..

நான் கல்லறை கட்டப் போவதில்லை என் காதலுக்கு..
கோவில் எழுப்புகிறேன்..
முடிந்தால் வழிபட்டு செல்..
என்னை அல்ல என் உண்மைக் காதலை..

No comments: