காற்று அடித்ததால் கொடி அசைந்த்தா
அல்ல கொடி அசைந்த்தால் காற்று அடித்ததா??
இவை பழையவை..
இதோ சொல்கிறேன் என் புதியவைகளை..
உன்னைப் பற்றி எழுதியதால் கவிதை அழகானதா
அல்ல உன் ஆழகை பற்றி எழுதியதால் அவை கவிதை ஆனதா?
அழகென்றால் உந்தன் பெண்மையா
அல்ல பெண்மையில் பிறந்த அழகா நீ??
நிலவில் இருந்து உனக்கு வண்ணம் பூசினரா
அல்ல உன்னில் இருந்து நிலவிற்க்கு வண்ணம் பூசினரா??
உன்னை கண்டதால் சூரியன் உதிக்கிறதா
அல்ல சூரியன் உதிப்பது உன்னைக் காணவா??
நீ உன் தாயின் முழூ உருவமா
அல்ல உன் மகளின் மாதிரி உருவமா??
உன்னை கண்டதும் காதல் பிறந்ததா
அல்ல உன்னை காதலிக்க கண்டதும் மீண்டும் பிறந்தேனா??
No comments:
Post a Comment