Friday, June 1, 2007

நாட்குறிப்பு..

நாட்குறிப்பு..

எதிர்காலமும்
கடந்தகாலமும்
அறிந்த ஜோசியன் அவன்..

சிலரது தினம்
உன்னிலே தொடக்கம்..
சிலரது தினம்
உன்னிலே முடியும்..

மகிழ்ச்சியில் அலங்கரிக்கப்படுவாய்..
துன்பங்களில் கரைக்கப்படுவாய்..

நீயும் ஒரு அரிய மலர் போலவே..
ஆண்டுக்கு ஒரு முறை புதிதாய் பூத்துக் கொண்டிருக்கிறாய்..

ரகசியம் சொல்..?
உனக்கு மட்டும் தான் வயது ஏற எற மீண்டும் பிறக்கும் வாய்ப்பு..

காதலர்களுக்கு ரகசிய வங்கி..
கவிஞர்களுக்கு கவிதை ஏடு..
வியாபாரிகளுக்கு கனக்குகளை சேகரிக்கும் கணினி..
மாணவர்களுக்கு அரசு விடுமுறை தாங்கும் குதூகலம்..

உனக்கும் எனக்கும் தாய் ,குழந்தை உறவே..
என்ன வித்தியாசம் என்றால்??
தினமும் நான் உன்னிடம் கதை சொல்லி
நானே உறங்குவேன்..

No comments: