Friday, June 1, 2007

நவீன யுக அலாவுதீனும் அற்புத விளக்கும்

நவீன யுக அலாவுதீனும் அற்புத விளக்கும்
(ஓர் கற்பனை)
தூசிக்கூட்டுக்குள் வீடு கட்டி கொண்டு வாழும் ,
தாடி வைத்த இளைஞ்சன் கையில்
ஓர் அற்புத விளக்கு கிடைக்க
பூதத்திடம் பலவற்றை கேட்டான்

தூசி அற்ற வீடு ,
தினம் ஒரு புத்தாடை ,
வெண் மேக மெத்தை ,
வீட்டிற்குள் வானம் ,
அதன் மத்தியில் ஓர் நிலவு என ..

எல்லாம் கிடைக்க உறக்கம் மட்டும் கடத்தி சென்று விட்டாளே ,
எப்படி உறங்குவது என புலம்ப..

யாரது குரு??
அவளைப் பற்றி சொல்லுங்கள் என பூதம் சொல்லியது

அவள் பெயர் அக்ஷயா
அள்ள அள்ள குறையாஅழகு
வெண் தாமரை உடல்
சூரியனும் தோற்றுப்போகும் சுட்டெரிக்கும் பார்வை
இரவிலும் கிடைக்காத குளிர்ந்த சிரிப்பு
பிரம்மன் அவளை வடித்து வடித்து கற்பனை தொலைத்த அழகு ..

ஆனால் ...

அதற்குள் ஆர்வம் தங்காமல் பூதம் செல்ல..
அவளை கண்டது..
சொன்ன அடையாளங்களுக்கு அவள் ஏற்றாவளா?
அல்ல அடையாளங்கள் கொண்டு செய்யப்படவளா??
என பிரிதது அறிய முடியா அழகு

காதல் வயப்பட்டு பூதம்
தன் காதலை சொல்ல ,
அவள் கட்டிவிட்டால் கையில் ராக்கி கயிறு
வருத்தத்துடன் ஒரே ஒரு கேள்வி கேட்டது

உன் அழகில் மயங்கியவர் லட்சம் பேர் இருப்பார்
உன் சிரிப்பில் மயங்கியவர் ஆயிரம் பேர் இருப்பார்
உன் பேச்சில் மயங்கியவர் நூறு பேர் இருப்பார்
ஆனால்
என் ஒருவனுக்கு மட்டும் ராக்கி கயிறா?

இல்லை அண்ணா நீங்கள் என் 76ஆவது அண்ணன்,
எனக்கு மணம் ஆகி விட்டது என முடிக்க
தாடி முளைத்து பூதம் ஜாடிக்குள் சிறைகொண்டது மீண்டும் ..

No comments: