Friday, June 1, 2007

எதிர் வீட்டுப்பெண்..

உன் வீட்டு கம்பியில்
காயும் துணி போல ,
நானும் மாலையில்
உனக்காய் காத்திருந்து காய்ந்து போவேன்
உன் முகம் காண..

மாலையில் நீ கோலம்
போட வருவாய்..
புள்ளிகளுக்கிடையே வளைந்து நீ போடும்
கோலம் போல ,
நட்புக்கூட்டம் இடையில் என் பார்வை வளைந்து
உன்னை கோலம் போடும்..

வாரம் ஒரு முறை கோவில் முகப்பில்
நீ ஏற்றும் தீபம் போல ,நானும் எரிவேன்
மீதம் உள்ள 6 நாட்களில் .

.மளிகை பொருட்கள் வாங்ககடை வீதி வருவாய்..
உனை அருகிருந்து ரசிக்க
நேற்றோடு நான் வெற்றாய் வாங்கியது 137ஆவது பேனா ..

நானும் சிறந்த நடிகன் ஆகி விடுவேன்,
உன்னிடம் என் காதலை எப்படி சொல்வது என
பல நூறு முறை ஒத்திகைப் பார்த்தே..

தோழிகளோடு நீ சிரித்து விட்டு போகையில்
ஒரு பார்வையை நான் உன் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் கவிப்பணிக்கு வேளை பளு அதிகம் ..
ஒரு பார்வையை நீ என் மீது வீசி விட்டால் போதும் ,
அன்று என் காதலுக்குபொங்கல்,தீபாவளி போனஸ்..

நம் விழிப்போரில்
தோற்பது யாராய் இருப்பினும் ,
வெல்லப்போவது நம் காதலாய் இருக்கக் கூடும்..

என் இதய கண்ணாடியை
ஒரு முறை வந்து பார்த்து விட்டுப் போ..
நீயும் நானும் தெரிவோம்..
வெட்கத்தில் நீ சிரித்து விட்டு போகையில் ,
கண்கூசி கண் அடைக்கும் என் இதயம்..

நம் காதலை அரங்கேற்றும் வேலையில்
விடுமுறை தினமாய் அனுசரிக்கப்படும்
என் கனவுலோகத்திற்க்கு..

No comments: