Friday, June 1, 2007

காதல் வலையில்..

என் விழி பார்வை
உன்னை முத்தமிட்டதும்
காதல் கொண்டு அரைந்தாய்
அதன் காயங்கள் என் இதயத்தில்

ஆயிரம் சிரிப்பொலியின் மத்தியில்
உன் ஒரு மவுனம்
என்னை சாய்த்ததே ..

என் காம்பு மீசைக்கும்
உயிர் கொடுத்தவள் நீயே

தினமும் காலை
என் பார்வை உன்னை தொட கூடாதென
ஆலமரத்தில கட்டி வைத்தார் போல்
வருவேனே..
ஆனால் அவை வேரோடு பிய்த்து
கொண்டு வரும் உனை காணும்போது ..

உன் ஓர விழி பார்வையுடன்
போராடி
போராடி
இதயத்தில் குத்து பட்டு
வீர மரணம் அடைவேன் ..

உன்னிடம் எழுதுகோள்
பெறவே
என்னிடம் உள்ள பேனாக்களை
பல முறை கொல்வேன் ..

மாலையில் சூரியன்
சிவப்பதெல்லாம் ,
உன்னை பிரியும் தருணம்
வந்து விட்டது என்பதால்
வந்த கோபமோ?

No comments: