Sunday, June 3, 2007

மனித உணர்ச்சிகள்..

மனிதன் - கடவுளின் படைப்புகளில் சிறந்த படைப்பு.
அவனிடமிருந்து வெளியேரும் உணர்ச்சிகள் ஏராளம்.
அவற்றின் காரணங்கள்,தன்மை ஏராளம்.அவற்றில் சில..

சிரிப்பு:
மகிழ்ச்சியின் வாசற் கதவு..
இலவசமாய் கிடைக்கும்
விலைமதிப்பற்ற நகை..
விருந்தாளியின் வரவேற்பறை..
நோய்களின் களித்தல் கணக்கு..
ஆயுளின் கூட்டல் கணக்கு..
கூட்டாளிகளுடன் சேர்ந்தால் பேசும் ஒரே மொழி..

கோபம்:
மனிதனின் எரிமலை சீற்றம்..
எதிர்பார்ப்பின் எதிர்ப்பு..
உரிமையின் இருப்பிடம்..
கண்டிப்பின் கானம்..
ஆளைக்கொல்லும்
சொந்த வீட்டு உறவுக்க்காரன்..

கண்ணீர்:
துக்கத்தின் அணைப் பெருக்கு..
குழந்தையின் காலிங் பெல்..
சகரா(sahara) பாலைவனத்தில் மழை..
புத்திக்கும் ,மனத்திற்க்கும்
போர் நடந்து,மனம் வென்று
போரில் வெளியேரும் குருதி..

மெளனம்:
உணர்ச்சியற்ற் உணர்ச்சி..
அயிரம் அர்த்தம் கொண்ட மொழி..
சில நேரங்களில் இந்த சொற்களுக்கு
வலு அதிகம்..
ஊடலின் தேசிய மொழி..
மனம் ஓய்வெடுக்கும் அறை..
கண்கள் மொழி
பெயர்க்கும் உணர்ச்சி..


ஆச்சர்யம்:
கேள்வியின் பிறப்பிடம்..
புதுமையின் வெற்றி..
ஆர்வத்தின் தீ..
அதிர்ச்சியில் அசை போடப்படும் அரிசி..
கவிஞ்ர்களின் கற்பனை தூண்டுதல்..

No comments: