Sunday, July 15, 2007

காதல் வந்துவிட்டது..

ரெட்டை ஜடை போடதே
என் ரெட்டை விழிகள்
உன்னை விட்டு விலக மறுக்கிறது..

ஏ மல்லிகை தோட்டத்து சொந்தக்காரி
உன் தோட்டத்து பூக்கள் அழகாய் பூப்பதன் காரணம் கண்டேன்..
அவை தினமும் சிரிக்க பழகி கொள்கின்றன
உன்னைக் கண்டு..

உன் மூச்சுக் காற்று ஒன்று போதும்
ஐஸ் கட்டிக்கும் ஜலதோஷம் பிடிக்கும்..

நீ
பூக்கள்,
மழை என எதன் மேலும் நேசம் வைக்காதே!!
உன்னை விட அவைகள் அழகெனகர்வம் கொள்கிறது பார்!!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்!!
உண்மைதான்..
இல்லையென்றால் என் முறை பெண்கள் மேல் வராத காதல்
உன் மேல் வந்திருக்காது..

நீ என்ன நூலகமா??
உன்னைப் படித்து படித்துஎன் கவித்திறனை வளர்த்துக்கொள்கிறேன்??

அடடே உன் கவிதை அருமை!!
நீ அடித்தல் திருத்தலுடன் எழுதி
கசக்கி எரிந்த தமிழ் கட்டுரையை தான் சொல்கிறேன்..

ஆயுள் முழுதும் நான் ஓர் மாணவனே
உன் கண்களைப்படித்துக்கொண்டே!!

தயவு செய்து உன் வீட்டு சமையல் கரண்டியில் நீ ருசி பார்க்காதே!!
பிறகு எல்லா உணவும் இனிப்பு பலகாரமாய்மாறி விடப் போகிறது!

ஒரு நாள் நீ
உள்ளிருந்து மழையை ரசித்துக்கொண்டிருந்தாய்..
வெளியிலிருந்து மழை உன்னை ரசித்துக்கொண்டிருந்தது..

உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த பூக்களை பழி தீர்க்க துடிக்கிறேன்..
உன் கூந்தலை முத்தமிட என்ன துணிவு பார்த்தாயா??

உன்னை மேலும் கீழும் உற்றுப்பார்க்கிறேன்
என கோபம் கொள்ளாதே..
சுடிதார் அணியும் நவயுக தேவதையை
இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்..

No comments: